பக்கம் எண் :


553


     தேர்மணி: குறுந். 275:8; அகநா. 4:12.

     4-6. தலைவன் தேர் பானாளில் வருதல்: குறுந். 311:3-7.

     8. தலைவி துஞ்சாமை: குறுந். 6:4, ஒப்பு.

(301)
  
(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் ஆற்றாளெனக்கவன்ற தோழிக்குத் தலைவி ஆற்றாமையின் காரணத்தைக் கூறியது.)
 302.    
உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே 
    
அருந்துய ருழத்தலு மாற்றா மதன்றலைப் 
    
பெரும்பிறி தாக லதனினு மஞ்சுதும் 
    
அன்னோ வின்னு நன்மலை நாடன் 
5
பிரியா நண்பின ரிருவரு மென்னும் 
    
அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன் 
    
துஞ்சூர் யாமத் தானுமென் 
    
நெஞ்சத் தல்லது வரவறி யானே. 

என்பது வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.

மாங்குடி கிழார்.

     (பி-ம்.) 4. ‘அன்னோ பின்னும’்; 5. ‘நண்பி னிருவரும்’, ‘வன்பினரிருவரும்’; 8. ‘ரவறி யோனே’.

     (ப-ரை.) தோழி--, அரு துயர் உழத்தலும் ஆற்றாம் -தலைவனுடைய பிரிவால் உண்டாகிய பொறுத்தற்கரியதுயரால் வருந்துதற்கும் ஆற்றலில்லேம்; அதன் தலை -அதற்கு மேல், பெரும் பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும் -இறந்துபடுதலை அதைக் காட்டிலும் அஞ்சுகின்றோம்;அன்னோ - அந்தோ! இன்னும்--, நன்மலை நாடன் -நல்ல மலைநாட்டை யுடைய தலைவன், இருவரும் பிரியாநண்பினர் என்னும் - இருவரும் என்றும் பிரியாத நட்பையுடையார் என்று பிறர் கூறும், அலரதற்கு அஞ்சினன்கொல் - பழிமொழிக்கு அஞ்சினனோ? பலர் உடன் துஞ்சுஊர்யாமத்தானும் - ஊரிலுள்ளோர் பலர் ஒருங்கே துயிலுகின்றஇரவிலும், என் நெஞ்சத்து அல்லது - யான் தன்னையேநினைப்பதனால் என் நெஞ்சின் கண் வருதலை யன்றி,வரவு அறியான் - நேரிலே வருதலை அறியான்; அதுபுரைத்தோ - அங்ஙனம் இருத்தல் உயர்வுடையதோ?அன்று--; உரைத்திசின் - நீ கூறுவாயாக.

     (முடிபு) தோழி, உழத்தலும் ஆற்றாம்; பெரும்பிறிதாகல் அதனினும்அஞ்சுதும்; நாடன் அஞ்சினன் கொல்? வரவறியான்; அது புரைத்தோ?அன்று; உரைத்திசின்.