மாங்குடி கிழார். (பி-ம்.) 4. ‘அன்னோ பின்னும’்; 5. ‘நண்பி னிருவரும்’, ‘வன்பினரிருவரும்’; 8. ‘ரவறி யோனே’.
(ப-ரை.) தோழி--, அரு துயர் உழத்தலும் ஆற்றாம் -தலைவனுடைய பிரிவால் உண்டாகிய பொறுத்தற்கரியதுயரால் வருந்துதற்கும் ஆற்றலில்லேம்; அதன் தலை -அதற்கு மேல், பெரும் பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும் -இறந்துபடுதலை அதைக் காட்டிலும் அஞ்சுகின்றோம்;அன்னோ - அந்தோ! இன்னும்--, நன்மலை நாடன் -நல்ல மலைநாட்டை யுடைய தலைவன், இருவரும் பிரியாநண்பினர் என்னும் - இருவரும் என்றும் பிரியாத நட்பையுடையார் என்று பிறர் கூறும், அலரதற்கு அஞ்சினன்கொல் - பழிமொழிக்கு அஞ்சினனோ? பலர் உடன் துஞ்சுஊர்யாமத்தானும் - ஊரிலுள்ளோர் பலர் ஒருங்கே துயிலுகின்றஇரவிலும், என் நெஞ்சத்து அல்லது - யான் தன்னையேநினைப்பதனால் என் நெஞ்சின் கண் வருதலை யன்றி,வரவு அறியான் - நேரிலே வருதலை அறியான்; அதுபுரைத்தோ - அங்ஙனம் இருத்தல் உயர்வுடையதோ?அன்று--; உரைத்திசின் - நீ கூறுவாயாக.
(முடிபு) தோழி, உழத்தலும் ஆற்றாம்; பெரும்பிறிதாகல் அதனினும்அஞ்சுதும்; நாடன் அஞ்சினன் கொல்? வரவறியான்; அது புரைத்தோ?அன்று; உரைத்திசின்.