பக்கம் எண் :


586


     செங்கணிரும் புலி: நற். 148:9; அகநா. 92:4.

     5-6. மரையாவைப் புலி கொல்லுதல்: மலைபடு. 505-6;அகநா. 3:7-9.

     8. கதவு திறப்பல்: குறுந். 333:6. வாழி வேண்டன்னை: குறிஞ்சிப். 1; ஐங். 101-10, 201-10; அகநா. 48:1, 68:1.

(321)
  
(தலைமகனது வரவு நீட்டித்ததாகத் தோழி இயற்பழித்த விடத்து,தலைவன் வர, அஃதுணர்ந்த தலைவி, "நாம் அவரூருக்குப் போய்அவரோடு பழகுவோம்" என்று கூறியது.)
 322.    
அமர்க்க ணாமா னஞ்செவிக் குழவி  
    
கானவ ரெடுப்ப வெரீஇ யினந்தீர்ந்து  
    
கான நண்ணிய சிறுகுடிப் பட்டென  
    
இளைய ரோம்ப மரீஇயவ ணயந்து  
5
மனையுறை வாழ்க்கை வல்லி யாங்கு  
    
மருவி னினியவு முளவோ  
    
செல்வாந் தோழி யொல்வாங்கு நடந்தே.  

என்பது தலைமகன் வரவுணர்ந்து (பி-ம். வரைவுணர்ந்து) தலைமகள்இயற்பட மொழிந்தது.

ஐயூர் முடவன்.

     (பி-ம்.) 2. ‘வொரீஇ’ 7. ‘யொல்லாங்கு’

     (ப-ரை.) தோழி--, அமர் கண் ஆமான் அம்செவிகுழவி - மேவுதலையுடைய காட்டுப் பசுவின் அழகியகாதுகளையுடைய கன்று, கானவர் எடுப்ப வெரீஇ இனம்தீர்ந்து - வேட்டுவர் எழுப்புவதனால் அஞ்சித் தன் இனத்தினின்றும் பிரிந்து சென்று, கானம் நண்ணிய சிறுகுடிபட்டென - காட்டினிடத்துப் பொருந்திய சிறிய ஊரிலேஅகப்பட்டதாக, இளையர் ஓம்ப மரீஇ - இளைய மகளிர்பாதுகாப்பக் கலந்து, அவண் நயந்து - அவ்விடத்தைவிரும்பி, மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு - வீட்டின்கண் உறையும் வாழ்க்கையில் வன்மை பெற்றது போல,மருவின் - கலந்து பழகுதலைக் காட்டிலும், இனியவும்உளவோ - இனிய பொருள்களும் இருக்கின்றனவோ?ஆதலின் நாமும் தலைவரோடு மருவும் பொருட்டு, ஒல்வாங்கு நடந்து - இயன்ற அளவில் நடந்து, செல்வாம் - தலைவன் இருக்குமிடத்திற்குச் செல்வேம்.

     (முடிபு) தோழி, ஆமான்குழவி எடுப்ப வெரீஇத் தீர்ந்து குடிப்பட்டென, ஓம்ப மரீஇ நயந்து வில்லியாங்கு, மருவின் இனியவும் உளவோ?நடந்து செல்வாம்.