பக்கம் எண் :


594


றோழி தகைமிகக், கோதை யாயமொடு குவவுமணலேறி, வீததை கானல்வண்ட லயரக், கதழ்பரித் திண்டேர் கடைஇ வந்து, தண்கயத் தமன்றவொண்பூங் குவளை, அரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி,பின்னுப்புறந் தாழக் கொன்னே சூட்டி, நல்வர லிளமுலை நோக்கி நெடிதுநினைந்து, நில்லாது பெயர்ந்தன னொருவன்" (அகநா. 110:6-25, 180:1-9); "வண்டலுற் றேமெங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீர்,உண்டலுற் றேமென்று நின்றதொர் போழ்துடை யான்புலியூர்க், கொண்டலுற் றேறுங் கடல்வர வெம்முயிர் கொண்டுதந்து, கண்டலுற்றேர்நின்றசேரிச்சென் றானொர் கழலவனே" (திருச்சிற். 290.)

     3-5. குறுந். 271:3-5.

(326)
  
(தலைவன் சிறைப்புறத்தே நிற்ப ஆற்றை நோக்கி, "நீ தலைவனைக்காட்டிலும் கொடியை" என்று கூறும் வாயிலாகத் தலைவி அவனதுகொடுமையை உணர்த்தியது.)
 327.    
நல்கின் வாழு நல்கூர்ந் தோர்வயின்  
    
நயனில ராகுத னன்றென வுணர்ந்த  
    
குன்ற நாடன் றன்னினு நன்றும்  
    
நின்னிலை கொடிதாற் றீய கலுழி  
5
நம்மனை மடமக ளின்ன மென்மைச்  
    
சாயல ளளிய ளென்னாய்  
    
வாழைதந் தனையாற் சிலம்புபுல் லெனவே.  

என்பது கிழவன் கேட்கும் அண்மையனாக அவன் மலையினின்றுவரும் யாற்றிற்கு (பி-ம். அண்மையானாக யாற்றோடு) உரைப்பாளாய்உரைத்தது.

அம்மூவன்.

     (பி-ம்.) 4. ‘றீங்கலுழுதி’, ‘றீயகலுழ்தி’ 6. ‘சாயலளியள்’, ‘சாயலளியவென்னாய்’.

     (ப-ரை.) தீய கலுழி - பொல்லாங்கையுடைய ஆறே,நம் மனை மடம் மகள் - நாம் செல்லும் மனையிடத்துள்ளமடப்பத்தையுடைய தலைவி, இன்ன - இதனைப் போன்ற,மென்மை சாயலள் - மெல்லிய சாயலை உடையவள்,அளியள் - அளிக்கத் தக்காள், என்னாய் - என்று கருதாயாகி,சிலம்பு புல்லென - மலைப்பக்கம் பொலிவழியும்படி,வாழை தந்தனை - அங்கே வளர்ந்த வாழை மரத்தைப்பெயர்த்துக் கொணர்ந்தனை; ஆதலின், நல்கின் வாழும் - தாம் தண்ணளி செய்தால் வாழ்கின்ற, நல்கூர்ந்தோர்வயின் - வறியோர்பால், நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்தகுன்றம் நாடன் தன்னினும் - அன்பு இல்லாராதல் நல்ல