அம்மூவன். (பி-ம்.) 4. ‘றீங்கலுழுதி’, ‘றீயகலுழ்தி’ 6. ‘சாயலளியள்’, ‘சாயலளியவென்னாய்’.
(ப-ரை.) தீய கலுழி - பொல்லாங்கையுடைய ஆறே,நம் மனை மடம் மகள் - நாம் செல்லும் மனையிடத்துள்ளமடப்பத்தையுடைய தலைவி, இன்ன - இதனைப் போன்ற,மென்மை சாயலள் - மெல்லிய சாயலை உடையவள்,அளியள் - அளிக்கத் தக்காள், என்னாய் - என்று கருதாயாகி,சிலம்பு புல்லென - மலைப்பக்கம் பொலிவழியும்படி,வாழை தந்தனை - அங்கே வளர்ந்த வாழை மரத்தைப்பெயர்த்துக் கொணர்ந்தனை; ஆதலின், நல்கின் வாழும் - தாம் தண்ணளி செய்தால் வாழ்கின்ற, நல்கூர்ந்தோர்வயின் - வறியோர்பால், நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்தகுன்றம் நாடன் தன்னினும் - அன்பு இல்லாராதல் நல்ல