தென்று உணர்ந்த குன்றநாடனது நிலையைக் காட்டிலும்,நின்நிலை நன்றும் கொடிது - நினது இயல்பு மிகவும்கொடியது.
(முடிபு) கலுழி, புல்லென வாழை தந்தனை; குன்ற நாடன் றன்னினும் நின்னிலை கொடிது.
(கருத்து) தலைவன் கொடியன்.
(வி-ரை.) தலைவன் நெடுநாள் வரையாது வந்தொழு கினானாக,அதனை விரும்பாத தலைவி கூறியது இது.
உலகின்மேல் வைத்துச் சொல்லினும் நல்குதலென்று தலைவன்தண்ணளி செய்தலையும், நல்கூர்ந்தோரென்றது தலைவியையும்,நயனிலராகுதலென்றது வரையாது ஒழுகுதலையும் குறித்து நின்றன.பொதுவகையாற் கூறுதலின் பன்மை வாசகம் படவைத்தாள். நாடன் - நாடனது நிலை; ஆகுபெயர். நன்றும்: மிகுதியைப் புலப்படுத்தியது. யாறுதலைவனது குன்றத்திலிருந்து வந்து தலைவியின் மனைக்கு அருகில்ஓடுவதாதலின் ‘நம்மனை மடமகள்’ என்று உளப்படுத்திக் கூறினாள். (குறுந். 284:6-8.)
தலைவியின் மென்மைக்கு வாழையின் மென்மை உவமை.நின்னோடு உறவுடைய என்னை நினைக்கச் செய்யும் வாழையைப் பறித்துவந்ததும், நீ தோன்றும் மலையின் பொலிவு அழியச் செய்ததுமாகியகொடுமை தலைவனது கொடுமையினும் மிக்கதென்றாள். தலைவன்பழகியார்திறத்து அன்பிலனாதலொடு அமைய, யாறோ பழகியார்பாற்பகைத்தன்மையும் உடையதாயிற்றாதலின் அதனை நன்றுங் கொடியதென்றாள்.
ஆல், ஏ: அசை நிலைகள்.
ஒப்புமைப் பகுதி 1. தலைவன் நல்குதல்: குறுந். 37:1, ஒப்பு.
7. சிலம்பில் வாழை வளர்தல்: "வாழையஞ் சிலம்பு" (அகநா.328:14, 332:9.)
மு. ஆற்றை நோக்கிக் கூறல்: அகநா. 398.
(327)
(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில் வருந்தியதலைவியை நோக்கி, "அலரை அஞ்சற்க; அவ்வலர் நன்மையையேவிளைக்கும்" என்று தோழி கூறியது.) 328. | சிறுவீ ஞாழல் வேரளைப் பள்ளி் |
| அலவன் சிறுமனை சிதையப் புணரி் |
| குணில்வாய் முரசி னிரங்குந் துறைவன் |
| நல்கிய நாடவச் சிலவே யலரே் |
5 | வில்கெழு தானை விச்சியர் பெருமகன் |
| வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர் |
| புலிநோக் குறழ்நிலை கண்ட் |
| கலிகெழு குறும்பூ ரார்ப்பினும் பெரிதே.் |