ஓதலாந்தையார். (பி-ம்.) 1. ‘வேனில்’ 2. ‘சினையஞற்றலி’, ‘யுகுத்தலி னானாது’4. ‘வழங்குஞ் சிறுநெறிதாவும்’ 7. ‘மழைக்கணிக்கு’.
(ப-ரை.) தோழி, கானம் இருப்பை - காட்டிலேவளர்ந்த இருப்பை மரத்தினது, வேனல் வெள்பூ - வேனிற்காலத்திலே மலரும் வெள்ளிய பூக்கள், வளிபொரு நெடுசினை உகுத்தலின் - காற்றால் அலைக்கப்பட்ட நெடியகொம்புகள் உதிர்ப்ப தனால், ஆர்கழல்பு - காம்பினின்றும்கழன்று, களிறு வழங்கு சிறு நெறி புதைய - களிறுகள்செல்லும் சிறிய வழி மறையும்படி, தாஅம் - பரக்கின்ற,பிறங்குமலை அரு சுரம் - விளங்கிய மலைகளையுடையகடத்தற்கு அரிய பாலைநிலத்தை, இறந்தவர் படர்ந்து - கடந்து சென்ற தலைவரை நினைந்து, பயில் இருள் நடுநாள் - பயிலுகின்ற இருளையுடைய அரையிரவில், துயில் அரிதுஆகி - துயிலல் அரியதாகி, தெள் நீர் நிகர் மலர் புரையும் -