| "தளைபிணி யவிழாச் சுரிமுகப் பகன்றை" (அகநா. 24:3) |
என்பவாதலின் அது முறுக்கிய ஆடையை ஒத்தது. பகன்றை - சிவதையென்பர் நச்சினார்க்கினியர் (குறிஞ்சிப் . 88, உரை.) பெருங்கையாலென்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். 13:155-60, உரை.)
பொதி-தளையவிழாத கட்டு. பகன்றைமலர் வெண்ணிற முடையது.மணமென்றது நறுமணத்தை; நச்சினார்க்கினியரும், ‘மணமில்லாதபகன்றைப் பூ' என்பர் (கலி. 73:1-5, உரை.)
‘மாலையும் புலம்பும் அவர் சென்ற நாட்டில் இன்று கொல்' என்றது,‘தலைவரது பிரிவால் இவ்விரண்டும் எனக்குத் துன்பத்தைத் தருகின்றன;அவை என்னைப் பிரிந்த தலைவருக்கும் துன்பத்தைத் தருவனவாம்.அவர் துன்புறுவரேல் ஆண்மையுடையவராதலின் அத்துன்பத்தினின்றும்நீங்க ஈண்டே வருவர். அவர் நாட்டில் இவையின்மையின் துன்பத்தைஅறிந்திலர் போலும்!' என்னும் நினைவிற்று. இன்றென்பதை மாலைக்கும்புலம்பிற்கும் தனித்தனியே கூட்டுக. கொல்: ஐயம். நாட்டே: ஏ அசைநிலை.
ஒப்புமைப் பகுதி 1. புலைத்தி: கலி ; 72:14; புறநா. 311:2.
1-3. புலைத்தி பசை தோய்த்தல்: "அறனில் புலைத்தி யெல்லித்தோய்த்த, புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு" (நற். 90:3-4); "பசைகொன் மெல்விரற் பெருந்தோட் புலைத்தி" (அகநா. 34:11.)
4. பகன்றை: குறிஞ்சிப் 88; நற். 86:3 ஐங். 87:1; அகநா. 176:10,316:6; புறநா. 16:14, 235:18.
பேரிலைப் பகன்றை வான்பூ: "பேரிலைப், பகன்றை வான்மலர்"(அகநா. 219:3-4.)
பகன்றையின் மலர் வெண்ணிறமுடையது: "பகன்றை வான் மலர்","வெள்ளிதழ்ப், பகன்மதி யுருவிற் பகன்றை மாமலர்" (ஐங். 97:1, 456:1-2); "பகன்றைப்பூ வுறநீண்ட பாசடைத் தாமரை, கண்பொரவொளிவிட்டவெள்ளிய வள்ளத்தாற், றண்கமழ் நறுந்தேற லுண்பவண் முகம்போல,வண்பிணி தளைவிடூஉம் வயலணி நல்லூர்" (கலி. 73:2-5); "பகன்றை,நீலுண் பச்சை நிறமறைத் தடைச்சிய, தோலெறி பாண்டிலின் வாலியமலர" (அகநா. 217:6-8.)
3-4. பகன்றைப் பூவிற்கு ஆடை: "பனித்துறைப் பகன்றைப்பாங்குடைத் தெரியல், கழுவுறு கலிங்கங் கடுப்பச் சூடி" (பதிற். 76:12-3); "போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன, அகன்றுமடி கலிங்கமுடீஇ" (புறநா. 393:17-8.)
5. இன்கடுங்கள்: குறுந். 298:5, ஒப்பு. 6-7, மு. குறுந். 46:6-7.
(330)
(தலைவன் பொருள்வயிற் பிரிய எண்ணியதையறிந்து வருந்தியதலைவியை நோக்கி, "அவர் கொடுமையையுடைய பாலை நிலத்தைக்கடந்து செல்வரோ? செல்லார்" என்று தோழி கூறியது.)