இளம்பூதனார். (பி-ம்) 1. ‘பைந்தோடு’, ‘செவ்வாய்ப் பெருந்தோட்’ 4. ‘இருநீர்ச்’,‘பெருநீர்ச்’.
(ப-ரை.) தோழி--, சிறு வெள் காக்கை - சிறிய வெண்மையையுடைய காக்கையினது, செ வாய் பெருதோடு -செவ்விய வாயையுடைய பெரிய தொகுதி, எறி திரைதிவலை ஈர்ம்புறம் நனைப்ப - வீசுகின்ற அலைகளின் நீர்த்துளிகள் தம் ஈரமாகிய புறத்தை நனைக்க, பனி புலந்து -அக்குளிரை வெறுத்து, உறையும் பல் பூ கானல் - தங்குதற்குஇடமாகிய பல மலர்களையுடைய சோலையையுடைய,விரி நீர் சேர்ப்பன் நீப்பின் - அகன்ற கடற்கரையையுடையதலைவன் பிரிந்தால், நாம் இழப்பது - நாம் இழக்கும்பொருள், நம் இன் உயிர் அல்லது - நமது இனிய உயிரையன்றி, பிறிது ஒன்று எவன் - வேறொன்று யாது?
(முடிபு) தோழி, சேர்ப்பன் நீப்பின் நாம் இழப்பது உயிரல்லதுபிறிதொன்று எவன்?
(கருத்து) தலைவனது பிரிவை யான் ஆற்றேன்.
(வி-ரை.) சிறுவெண்மை யென்றது கழுத்திலுள்ள நிறத்தை.காக்கையின் உள்வாய் சிவந்திருக்கும்.
‘நாமிழப்பது பிறிதொன்றெவன்?’ என்றது, தோழிபாற் செறலைப்புலப்படுத்தியது; “நம்மிடம் இழப்பதற்கு உயிரையன்றி வேறு என்னபொருள் இருக்கிறது?” என்று வினாவியது, ‘இதனை நீ அறிந்தும்அறியாள்போல் என்னை வினவினை’ என்னும் நினைவிற்று.
எவனோ : ஓ அசை நிலை. ஏ : அசை நிலை.