பக்கம் எண் :


606


    (மேற்கோளாட்சி) மு. சேணிடையின்றி இட்டிதாகப் பிரிந்துழித் தலைவி இரங்கித்தன் வயினுரிமையும் அவன்வயிற் பரத்தைமையும்படக் கூறியது(தொல். களவு. 20, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. சிறுவெண் காக்கை: குறுந். 246:1, ஒப்பு.

    பறவைகளின் தொகுதியைத் தோடென்றல்: குறுந். 34:4, வி-ரை.

    4-6. தலைவன் பிரியின் தலைவி உயிர் நீங்குதல்: குறுந். 32:6, ஒப்பு. 57:3-4, ஒப்பு. 103:6, 169:6, 197: 4-5, 273:8, 290 : 3-6,319: 7-8; அகநா. 52:13, 95:4-5.

(334)
  
(தலைவி இற்செறிக்கப்படுதலை உணர்த்திய தோழி, “அவள் ஊர்வெற்பிடை நண்ணியது” என்றும், “அவள் வல்விற் கானவர் தங்கை”என்றும் கூறி இரவுக்குறி பெறுதற் கரிது என்பதைத் தலைவனுக்குப் புலப்பட வைத்தது.)
 335.   
நிரைவளை முன்கை நேரிழை மகளிர் 
    
இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச் 
    
சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து 
    
பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும் 
5
வெற்பிடை நண்ணி யதுவே வார்கோல் 
    
வல்விற் கானவர் தங்கைப் 
    
பெருந்தோட் கொடிச்சி யிருந்த வூரே. 

என்பது இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.

     (நயவாமை - தலைவன் விரும்பாதபடி.)

இருந்தையூர்க் கொற்றன் புலவன்.

    (பி-ம்) 5. ‘வெற்பயனண்ணி’, ‘வெற்பனண்ணி’, ‘வெற்பன நண்ணி’.

    (ப-ரை.) வார் கோல் - நீண்ட அம்பையும், வல்வில் -பல இலக்குக்களை ஒரு தொடையில் துளைக்கவிடும் வலியவில்லையும் உடைய, கானவர் தங்கை - வேட்டுவருடையதங்கையாகிய, பெருதோள் கொடிச்சி - பெரிய தோளையுடைய குறிஞ்சிநில மகளாகிய தலைவி, இருந்த ஊர் -வாழும் ஊர், நிரை வளை முன்கை - வரிசையாகிய வளையையுடைய முன்கையையும், நேர் இழை மகளிர் - நேர்ந்தஅணிகலன்களையுமுடைய மகளிர், இரு கல் வியல் அறை -கரிய மலையிலுள்ள அகன்ற பாறையினிடத்து, செ தினைபரப்பி - சிவந்த தினையைப் பரப்பி, சுனை பாய்சோர்வுஇடை நோக்கி - சுனையின்கண் பாய்கின்ற சோர்தலையுடைய சமயத்தைப் பார்த்து, சினையிழிந்து - மரக்கிளை