பக்கம் எண் :


609


(இரந்து பின்னின்ற தலைவனுக்குத் தோழி தலைவியின் இளமைத்தன்மை கூறியபொழுது, அவன் அவள் பருவம் வாய்த்ததையும் தன்னைவருத்திய வண்ணத்தையும் உணர்த்தியது.)
 337.   
முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே 
    
கிளைஇய மென்குரல் கிழக்குவீழ்ந் தனவே 
    
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின 
    
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற் 
5
கியான்ற னறிவலே தானறி யலளே 
    
யாங்கா குவள்கொ றானே 
    
பெருமுது செல்வ ரொருமட மகளே. 

என்பது தோழியை இரந்து பின்னின்ற கிழவன், தனது குறையறியக்கூறியது.

பொதுக்கயத்துக் கீரந்தை.

     (பி-ம்.) 1. ‘முகிழ்முகுத்தனவே’, ‘தலைஇய’ 2. ‘குரலே’ 3. ‘செறிநிறை’ 5. ‘யான்றன் னறிவ லென்னறி யலளே’ 7. ‘செல்வனொரு’.

    (ப-ரை.) முலை முகிழ் முகிழ்த்தன - நகில்கள் அரும்பின; தலை - தலையில், கிளைஇய மெல்குரல் கிழக்குவீழ்ந்தன - கிளைத்த மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழேதாழ்ந்தன; செறிநிரை வெள்பலும் - செறிந்த வரிசையாகியவெள்ளிய பல்லும், பறிமுறை நிரம்பின - முதன்முறைவிழுந்து முற்றும் முளைத்து நிரம்பின; சுணங்கும் சிலதோன்றின - தேமலும் சில வெளிப்பட்டன; அணங்குதற்குயான் தன் அறிவல் - அவள் வருத்தும் பொருட்டு நான் அவளைஅறிவேன்; தான் அறியலள் - அவள் அதனை அறிந்திலள்;பெருமுது செல்வர் ஒரு மடமகள் - பெரிய முதிய செல்வத்தையுடையாரது ஒப்பற்ற மடப்பத்தையுடைய தலைவியாகிய அவள், யாங்கு ஆகுவள் கொல் - எத்தன்மையையுடையவளாவளோ?

     (முடிபு) முலை முகிழ் முகிழ்த்தன; தலை குரல் வீழ்ந்தன; பல்லும்நிரம்பின; சுணங்கும் தோன்றின; யான் தன்னறிவல்; தான் அறியலள்; மடமகள் யாங்காகுவள் கொல்?

     (கருத்து) தலைவி பருவம் வாய்த்தவளாகி என்னை வருத்தினாள்.

     (வி-ரை.) தலைவி பேதைப் பருவம் கடந்தவளென்பதை முதலிற்கூறினான்;