குறுங்குடி மருதன். (பி-ம்.) 2. ‘திவலைப்’ 3. ‘அண்ணனல்லேறொடு’ 5. ‘பால்வார்’,‘குழவியாளினிரையிறந்’, ‘யானிரையிறந்’, ‘யாநாளிறையிறந்’, ‘யானினிரையிறந்’.
(ப-ரை.) தோழி--, தண்ணென - குளிர்ச்சி உண்டாகும்படி, தூற்றும் துவலை பனி கடு திங்கள் - வீசுகின்ற துளிகளாகிய பனியையுடைய கடுமையாகிய மாதத்தில், புலம்பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு - மேய்புலத்தின்கண்ணேயுள்ள பயிரை அருந்திய தலைமையையுடையஎருதோடு, நிலம் தூங்கு அணல - நிலத்தளவும் நாலுகின்றஅலைதாடியை யுடையனவாகிய, வீங்கு முலை செருத்தல் -பால் நிரம்புதலாற் பருத்த முலைக்காம்பையுடைய மடியையுடைய பசுக்கள், பால் வார்பு - பாலை ஒழுகவிட்டு,குழவி உள்ளி - தம் கன்றுகளை நினைந்து, நிரை இறந்து -தம்மோடு ஒருங்கு மேயும் ஏனைய நிரைகளை நீங்கி,ஊர்வயின் - ஊரினிடத்தே, பெயரும் - மீண்டு வருகின்ற,புன்கண் மாலை - துன்பத்தைத் தரும் மாலைக்காலத்தில்,அரு பெறல் பொருள் பிணி போகி - அரிதிற் பெறுகின்றபொருள்மேற் சென்ற நெஞ்சப் பிணிப்பினை நிறைவேற்றச்சென்று, பிரிந்து உறை காதலர் - தம்மை முன்பிரிந்துஉறைந்த தலைவர்கள், வர காண்போர் - மீண்டுவரக்காணும்மகளிர், மன்ற - நிச்சயமாக, நோற்றோர் - தவஞ் செய்த வராவர்.