பக்கம் எண் :


621


     (முடிபு) தோழி, மாலையில் காதலர் வரக்காண்போர் நோற்றோர் மன்ற.

     (கருத்து) தலைவர் இப்பொழுது வந்திலராதலின் யான் வருந்துவேன்.

     (வி-ரை.) தூற்றுந்துவலைப் பனிக்கடுந்திங்களென்றது பனிக்காலத்தைச் சுட்டியது. அணல் - அலைதாடி யென்பர் (பு. வெ. 12, உரை.) செருத்தல்: ஆகுபெயர். மாலைக் காலத்தில் பசுக்கள் தம்முடைய கன்றுகளை நினைந்து பிரிந்து வந்தன. பொருட்பிணி - பொருள்வேட்கை (இறை. 35, உரை.)

    ஒப்புமைப் பகுதி 1. நோற்றோர் மன்ற: புறநா. 26:16.

    3-4. ஆனேறுடன் பசுக்கூட்டம் இருத்தல்: அகநா. 105: 15, 213:6, 269:3, 291:3.

    6. புன்கண் மாலை: குறுந். 46:6, 330:6.

    4-6. மாலையில் கன்றை நினைந்து பசுக்கள் வருதல்: குறுந். 108:2, ஒப்பு.

     பசுக்கள் கன்றை நினைந்து பாலை வார்த்து வருதல்: "பதவுமேயலருந்து மதவுநடை நல்லான், வீங்குமாண் செருத்த றீம்பால் பிலிற்றக்,கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு, மாலை" (அகநா. 14:9-12);"குவளை மேய்ந்த குடக்கட் சேதா, முலைபொழி தீம்பா லெழுதுகளவிப்பக், கன்றுநினை குரல மன்றுவழிப் படர" (மணி. 5:130-32.)

    7. பொருட்பிணி: குறுந். 255:7, ஒப்பு.; இறை. சூ. 35, 39.

(344)
  
(பகலில் வந்து தலைவியைக் கண்டு அளவளாவிச் செல்லும்வழக்கத்தையுடைய தலைவனை நோக்கி, "நீ இனி இரவில் வந்து இங்கேதங்கிச் செல்க" என்று தோழி கூறியது.)
 345.   
இழையணிந் தியல்வருங் கொடுஞ்சி நெடுந்தேர் 
    
வரைமரு ணெடுமணற் றவிர்த்துநின் றசைஇத் 
    
தங்கினி ராயிற் றவறோ தெய்ய 
    
தழைதா ழல்கு லிவள்புலம் பகலத் 
5
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங்கழி 
    
இழுமென வொலிக்கு மாங்கட் 
    
பெருநீர் வேலியெஞ் சிறுநல் லூரே. 

என்பது பகல்வந்து ஒழுகுவானைத் தோழி இரா வா வென்றது.

அண்டர்மகன் குறுவழுதி.

     (பி-ம்.) 1. ‘கொடிஞ்சி’ 2. ‘றவிர்த்த நிரையசைஇ’, ‘றவிர்த்தனிரசைஇ’3. ‘றவறோதகைய’, ‘றவறேதைய’, ‘றவறோதைஇய’.

     (கு-பு.) இச்செய்யுளின் நாலாம் அடி ஒரு பிரதியில் இல்லை.