வாயிலிளங் கண்ணன். (பி-ம்) 1. ‘முனைக்கோட்’ 7. ‘நயந்துதான் மயங்கிச்’ 8. ‘செல்லவு’.
(ப-ரை.) தோழி--, நாகு பிடி நயந்த - இளம்பிடியைவிரும்பிய, முளை கோடு இள களிறு - மூங்கில் முளையைப்போன்ற கொம்பையுடைய இளைய களிறு, குன்றம் நண்ணி - மலையிடத்தே பொருந்தி, குறவர் ஆர்ப்ப - அங்குள்ளகுறவர் முழங்கியதனால், மன்றம் போழும் - ஊரிடத்துள்ளமன்றத்தைப் போழ்ந்து செல்லும், நாடன் - நாட்டையுடையதலைவன், காலை வந்து - பகலில் வந்து, சுனை பூ குவளைதொடலை தந்தும் - சுனையில் மலர்ந்த குவளைமலர்மாலையை நினக்குத் தந்தும், தினை புனம் மருங்கில் - தினைக்கொல்லையினிடத்தில், படு கிளி ஓப்பியும் - வீழ்கின்றகிளிகளை நம்மோடு ஓட்டியும், மாலை பொழுதில் - பிறகுவந்த மாலைக்காலத்தில், நல் அகம் நயந்து - நல்லநெஞ்ச த்தின் கண்ணே ஒன்றை விரும்பி, உயங்கி - வருந்தி,சொல்லவும் ஆகாது - அக்கருத்தை வெளிப்படச் சொல்லவும்எழுச்சி பெறாமல், அஃகியோன் - குறைவுற்றான்.
(முடிபு) தோழி, நாடன் காலைவந்து தந்தும் ஒப்பியும் மாலைப்பொழுதில் நயந்து உயங்கி அஃகியோன்.
(கருத்து) தலைவன் மாலைப்பொழுதின் கண்ணும் வரும் இரவுக்குறியை நயந்தான்; அதனைக் குறிப்பினால் அறிந்தேன்.
(கருத்து) மன்றம் - குறவர் ஊர்களிலுள்ள பொது இடம்.