கொற்றன். (பி-ம்.) 1. ‘விம்ம’ 2. ‘பேதுறல் யாங்கோடிட்டு’, ‘பேதுறவாய்’3. ‘வாயபற்று’, ‘வாஅயபற்று’ 6. ‘கோவலர்க்’ 7. ‘சொல்லுவ’, ‘சொல்லு’.
(ப-ரை.) வீங்கு இழை நெகிழ - செறிந்திருந்த அணி கலன்கள் நெகிழும்படி, விம்மி -அழுது, ஈங்கு - இவ்வாறு, எறிகண் பேதுறல் - நீர்த்துளிகளை வெளிவிடும் கண்ணோடு மயங்கற்க. ஆய் கோடு இட்டு - ஆராய்கின்ற கோடுகளைக் கிழித்து, சுவர்வாய் பற்றும் - சுவரினிடத்தைப் பற்றி நிற்கும், நின் படர் - நினது துன்பம், சேண் நீங்க வருவேம் - நெடுந் தூரம் போகும்படி மீண்டு வருவேம், என்ற - என்று தலைவர் கூறிய, பருவம் உதுக்காண் - பருவமானது இது பார், முல்லை மெல் முகை - முல்லையினது மெல்லிய அரும்புகள், தனியோர் இரங்கும் பனிகூர்மாலை - தலைவரைப் பிரிந்ததனிமையையுடையோர் வருந்துதற்குக் காரணமாகிய குளிர்ச்சி மிக்க மாலைக்காலத்தில், பல் ஆன் கோவலர் - பல பசுக்களை யுடைய இடையர்களது, கண்ணி - மாலையிடத்தே இருந்து,சொல்லுபஅன்ன - இப்பருவத்தைச் சொல்லுவனவற்றைப் போன்றன.
(முடிபு) பேதுறல்; நின் படர் நீங்க வருவேமென்ற பருவம் உதுக் காண்; முல்லைமென்முகை சொல்லுபவன்ன.
(கருத்து) தலைவர் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததாதலின்அவர் விரைவில் வருவர்.