மேற்கோளாட்சி 1. கண்டோர் கேட்பத் தலைவி கூறியது ( தொல். செய். 197, பேர்.); செவிலி கேட்பத் தலைவி கூறியது. ( தொல். செய். 196, ந.)
மு. வெறியாடுமிடத்து வேலற்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது (இறை. 16); வேலனொடு கூறுதற்கண் தலைவி உசாவியது( தொல். களவு. 24, இளம்; பொருள். 13, ந.)
ஒப்புமைப் பகுதி 1. முதுவாய் வேலன்: அகநா. 388:19.
3. சில்லவிழ் மடை: “புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி” (புறநா. 360:18.)
4. நுதல் நீவுதல்: குறிஞ்சிப். 182; நற். 28:2, 316:6; கலித். 21:6;அகநா. 49:6, 165:9. 240:10; தமிழ் நெறி. மேற். 96.
1-4. வேலன் சிறுமறி கொல்லல்: “சிறுகுள கருந்துபு தாய்முலை பெறாஅ, மறிகொலைப் படுத்தல் வேண்டி வெறிபுரி, ஏதில் வேலன்” (அகநா. 292:3-5.)
5-7. அணங்கிய அகலம்: “நாடன், மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்” (அகநா. 22:2-3.)
மு. | “தண்ணென் சாயலிவ ளுண்ணோய் தணிய |
| எண்ணினை கொடுத்தி யாயின் |
| அண்ண லாகமு முண்ணுமோ பலியே” (தமிழ் நெறி. மேற். 104); |
| “வண்டா ரிரும்பொழில் வல்லத்துத் தென்னற்கு மாறெதிர்ந்து |
| விண்டா ருடலின் மறியறுத் தூட்டி வெறியயர்ந்து |
| தண்டார் முருகற் றருகின்ற வேலநற் றண்சிலம்பன் |
| ஒண்டா ரகலமு முண்ணுங் கொலோநின் னுறுபலியே” (பாண்டிக்.); |
| “கோல மறியின் குருதியாற் கொய்ம்மலரால் |
| வேல னயரும் வெறியாட்டுச் - சால |
| மடமார் மயின்முருக னன்றியே யண்ணல் |
| தடமார்பு முண்ணுமோ தான்” (கிளவித்தெளிவு.) |
(362)
(தலைவனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி, “இனியளாகிய தலைவியைப் பிரிந்து செல்லுதல் இன்னாமையைத் தருவது” என்று அவனுக்குக் கூறியது.) 363. | கண்ணி மருப்பி னண்ண னல்லேறு |
| செங்கோற் பதவின் வார்குரல் கறிக்கும் |
| மடக்கண் வரையா நோக்கி வெய்துற்றுப் |
| புல்லரை யுகாஅய் வரிநிழல் வதியும் |
5 | இன்னா வருஞ்சுர மிறத்தல் |
| இனிதோ பெரும வின்றுணைப் பிரிந்தே. |
என்பது பிரிவுணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது.
செல்லூர்க் கொற்றன் (பி-ம். சொல்லூர்க் கொற்றன்.)