பக்கம் எண் :


669


     (முடிபு) வேனிலானே தண்ணியள்; பனியில் சிறு வெம்மையள்.

     (கருத்து) தலைவி பிரிதற்கரிய இயல்பினள்.

     (வி-ரை.) அறிதற்கும் துன்னுதற்கும் அரிய பொதியிலென்றாள்.

  
“முயலுநர் முற்றா வேற்றரு நெடுஞ்சிமைப்  
  
 புகலரும் பொதியில்”        (அகநா. 322:13-4) 

    சூர் - முருகனும் வரையரமகளிரும், பொதியிற் சந்தனம்சிறப்புடைத்தாதலின் அதனைக் கூறினான். ‘அடுக்கத்தாஅம்’ என்றபாடத்திற்கு, மலையிலுள்ள நீரென்று பொருள் கொள்க; பொதியிற்சுனைநீர்,

  
“தென்றிசை யெல்லை விண்புகு பொதியிற் 
  
 சூருடை நெடுஞ்சுனை நீர்”    (தொல். களவு. 43, ந. மேற்.)  

என்று சிறப்பிக்கப்படும். வெயில் - வெம்மை.

    வெம்மையையுடைய வேனிலில் தண்ணியளாகவும் குளிர் மிகுதியை யுடைய பனிக்காலத்தில் சிறுவெம்மையளாகவும் தலைவியிருத்தலின், எக்காலத்தும் அணைதற்கு இனியளானாள்.

     ஒப்புமைப் பகுதி 2. சூருடையடுக்கம்: நற். 359:9;அகநா. 158:8, 162:25,198:14-7, 359:11. 1-2. பொதியிற் சந்தனம்:அகநா. 13: 2-5; சிலப். 4:38; பெருங். 1. 58:30, 2. 4:96.

(376)
  
(“தலைவன் பிரிந்தமையால் என் உடல் மெலியவும் அவனதுஇயல்பு நினைந்து யான் ஆற்றினேன்; நீ ஆற்றாயாதல் என்?” என்றுதலைவி, வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கூறியது.)
 377.   
மலரே ருண்கண் மாணலந் தொலைய 
    
வளையேர் மென்றோண் ஞெகிழ்ந்ததன் றலையும் 
    
மாற்றா கின்றே தோழியாற் றலையே 
    
அறிதற் கமையா நாடனொடு 
5
செய்து கொண்டதோர் சிறுநன் னட்பே. 

என்பது வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்திஅழிந்து கூறியது.

மோசி கொற்றன் (பி-ம். மோசிற்றன.்)

     (பி-ம்.) 5. ‘சிறுநன் னடையே’.

    (ப-ரை.) தோழி--, அறிதற்கு அமையா நாடனொடு - தன் இயல்பு முற்றும் அறிதற்குப் பொருந்தாத தலைவனோடு,செய்து கொண்டதோர் சிறு நல் நட்பு - யாம் செய்துகொண்ட ஒரு சிறிய நல்ல நட்பானது, மலர் ஏர் உண் கண்மாண் நலம் தொலைய - பூவினை யொத்த மையுண்ட