பக்கம் எண் :


87


328: 3-4); “நல்குவன் போலக் கூறி, நல்கானாயினும்” (ஐங். 167:3-4): “நல்குவ ரென்னு நசை” (குறள். 1156). நல்கலும் நல்குவர்: குறுந். 218:4, 251:3, 268:2; நற்.106:1, 147:7, 318:1; ஐங்.36:3; கலி.23:7, 54:8, 14, 55:19; அகநா. 8:18; புறநா. 1:5, அடிக்.

    3. யாமரம்: தொல். உயிர்மயங்கு. 27.3-4. யானை யாமரத்தைப் பொளித்தல்: (குறுந். 232:4-5); “உம்ப லகைத்த வொண்முறி யாவும்” (மலைபடு.429); “பெருங்களி றுரிஞ்சிய மண்ணரை யாஅத், தருஞ்சுரக் கவலைய வதர்படு மருங்கின்” (அகநா.17: 16-7).

    2-4. யானை யாவைப் பொளித்துப் பிடிக்கு ஊட்டுதுல்: (குறுந். 255: 1-5, 307: 4-7); “யானைதன், கொன்மருப் பொடியக் குத்திச் சினஞ் சிறந், தின்னா வேனி லின்றுணை யார, முளிசினை யா அத்துப் பொளிபிறந் தூட்டப், புலம்புவீற் றிருந்த நிலம்பகு வெஞ்சுரம்” (அகநா. 335: 4-8). பாலை நிலத்தில் யானை பிடியைப் பாதுகாத்தல்: நற்.137:6-7; கலி.11:9.

     மு.  
“புன்றலை மடப்பிடி யுணீஇய ரங்குழை  
  
 நெடுநிலை யாஅ மொற்றி நனைகவுட் 
  
 படிஞிமிறு கடியுங் களிறே... .... .. .. .. 
  
 . .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. ... 
  
 பிரிந்துசே ணுறைநர் சென்ற வாறே’’         (அகநா. 59: -18)  
(37)
  
(தலைவன் வரைபொருளுக்குப் பிரிந்து நெடுங்காலமாக வாராதிருப்ப, வருந்திய தலைவியை நோக்கித் தோழி, ‘‘நின்னை வரைந்து கொள்ளும் பொருட்டன்றோ அவர் பொருளீட்டச் சென்றார்; அங்ஙனமிருப்ப நீ அதனை நன்றென்று கருதாமல் வருந்துவது யாதுகாரணம் பற்றி?’’ என்று வினாவியபோது, ‘’அவர் பிரிவை ஆற்றும் வன்மை என்பால் இல்லை’’ என்று தலைவி உணர்த்தியது.)
 38.    
கான மஞ்ஞை யறையீன் முட்டை 
    
வெயிலாடு முசுவின் குருளை யுருட்டும் 
    
குன்ற நாடன் கேண்மை யென்றும்  
    
நன்றுமன் வாழி தோழி யுண்கண் 
5
நீரொ டொராங்குத் தணப்ப 
    
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே. 

என்பது வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது.

கபிலர்.

    (பி-ம்) 1. ‘யறையின’்; 2. ‘தகற்றல், தகறல்’.

    (ப-ரை.) தோழி -, கானம் மஞ்ஞை - காட்டிலுள்ள மயிலானது, அறை ஈன் முட்டை - பாறையில் ஈன்ற முட்டைகளை, வெயில் ஆடும் முசுவின் குருளை உருட்டும் - வெயிலில் விளையாடும் முசுவின் குட்டி உருட்டுதற்கு