பக்கம் எண் :


89


     ஒப்புமைப் பகுதி 3. நாடன் கேண்மை: குறுந். 3:4.

     4. நன்றுமன்: குறுந். 58:2, 134:2, 226:4.

     5. ஒராங்கு: குறுந்.257:1, 316:5. 4-5. தலைவன் பிரிவினால் தலைவி கண்ணீர் விடுதல்: குறுந்.11:2, 22: 1-2, 35: 5, அகநா. 5:21, 5-6.பிரிவை ஆற்ற வல்லவர்: “அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப், பின்னிருந்து வாழ்வார் பலர்” (குறள்.1160).

  மு.  
“வந்தாய் பவரையில் லாமயின் முட்டை யிளையமந்தி 
   
 பந்தா டிரும்பொழிற் பல்வரை நாடன்பண் போவினிதே  
   
 கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்றென் றில்லை தொழார் குழுப்போற் 
   
 சிந்தா குலமுற்றுப் பற்றின்றி நையுந் திருவினர்க்கே” 
   
                                    (திருச்சிற். 276.)  
(38)
  
(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாதிருந்த தலைவியை, “நீ ஆற்றல் வேண்டும்” என்று வற்புறுத்திய தோழிக்கு, “தலைவர் சென்ற வழியானது கடத்தற்கரிய கொடுமையை யுடையதென்று அறிந்தார் கூறுவர்; அதனைக் கேட்ட யான் ஆற்றுவது எங்ஙனம்?” என்று தான் ஆற்றாமையின் காரணத்தைத் தலைவி தெரிவித்தது.)
  39.    
வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென  
     
நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும் 
     
மலையுடை யருஞ்சுர மென்பநம் 
     
முலையிடை முனிநர் சென்ற வாறே. 

என்பது “பிரிவிடை ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்கு, “யாங்ஙனம் ஆற்றுவேன்!” எனத் தனது ஆற்றாமைமிகுதி தோன்றத் தலைமகள் கூறியது.

    (பி-ம்) தலைமகள் கூறுகின்றாள், “நம் முலையிடைத்துயின் முனிந்து போயினார் சென்றவழி இப்படிப்பட்ட கொடுமைத்தால்; யான் எங்ஙனம் ஆற்றியுளேனாவேன்; யான் ஆற்றுகின்றிலேனென நீ ஆற்றாயாகின்ற தென்?” எனத் தோழிக்குத் தலைமகள் கூறியது).

ஒளவையார் (பி-ம். அவ்வையார்).

     (பி-ம்) 1. ‘வெந்தெறற்’ 2. ‘பொங்கர் போந்தென’ 3. ‘மலையிடை’

     (ப-ரை.) தோழி-, நம் முலையிடைமுனிநர் -நம் நகிலினிடத்துத் துயிலுதலை வெறுத்தவர், சென்ற ஆறு - பிரிந்து சென்ற வழியானது, வெ திறல் கடு வளி - வெம்மையான வலியையுடைய விரைவான காற்றானது, பொங்கர் - மரக்கிளையிலே, போந்தென - வீசுதலால், உழிஞ்சில் - வாகை மரத்தினது, நெற்று விளைவற்றல் - நெற்றினது முற்றிய வற்றலானது, ஆர்க்கும் - ஒலித்தற்கு இடமாகிய, மலை உடை அரு சுரம் - மலைகளையுடைய கடத்தற்கரிய சுரமாகும், என்ப - என்று கூறுவர்.