கருதி. மகளிரென்று பன்மை வாசகம் படக்கூறியது தலைவன் பலர்பால் அன்புடையானென்பதை நினைந்து. இதுவே வாயின் மறுத்தற்கு ஏதுவாயிற்று.
அம்ம: வியப்புக் குறிப்பு. சூளே: ஏ ஈற்றசை.
ஒப்புமைப் பகுதி 1. மகளிர் தோள்களில் கரும்பின் வடிவத்தை எழுதுதல்:“தோண்மேற், கரும்பெழுது தொய்யிற்கு”, “நற்றோளிழைத்தகரும்புக்கு”, “தெரிவேய்த்தோட் கரும்பெழுதித் தொய்யில்செய்தனைத்தற்கோ”, “நடாஅக் கரும்பமன்ற தோளாரை”, “அன்றுதானீர்த்த கரும்பணிவாடவென், மென்றோண் ஞெகிழ்த்தான்”, “நெடுமென்றோட், பெய்கரும் பீர்க்கவும் வல்லன்” (கலி. 63:7-8, 64:19, 76:15, 112:6, 131:29-30,143:31-2); “கரும்பும் வல்லியும் பெருந்தோளெழுதி” (சிலப். 2:29)
2. குறுந்தொடி: குறுந். 267:5, 356:8.
3. நலனுண்டு துறத்தல்: “தோணல முண்டு துறக்கப்பட்டோர்” (கலி். 23:8.)
4. தலைவனது சூள்: குறுந். 238:5, ஒப்பு.
(384)
(நொதுமலர் வரைவொடு புகுந்தமையறிந்த தலைவி, ‘‘தலைவன்தன் அன்பிற் சிறிதும் குறையாதிருப்ப அதனை யறியாது இவ்வூரிற்புதியோர் சிலர் வந்தனர்” என்று கூறுவாளாய்த் தோழியை அறத்தொடுநின்று அவ்வரைவை மாற்றச் சொல்லியது.) 385. | பலவிற் சேர்ந்த பழமா ரினக்கலை |
| சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச் |
| செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல் |
| இருவெதிர் நீடமை தயங்கப் பாயும் |
5 | பெருவரை யடுக்கத்துக் கிழவ னென்றும் |
| அன்றை யன்ன நட்பினன் |
| புதுவோர்த் தம்மவிவ் வழுங்க லூரே. |
என்பது வேற்று வரைவு மாற்றியது.
[“உயிர்செல, வேற்றுவரைவு வரினது மாற்றுதற்கண்ணும்”(தொல். களவு. 20) ]
கபிலர். (பி-ம்.) 1. ‘பழமருந்தினக்கலை’, ‘பழந்தினினக்கலை’, 2. ‘சிலையிற’்;7.‘தாமிவ்’, ‘இப்பழங்கேளூரே’.
(ப-ரை.) பலவில் சேர்ந்த பழம் ஆர் இனம் கலை -பலாமரத்திற் பொருந்திய பழத்தை உண்ட திரளையுடைய ஆண் குரங்குகள், சிலைவில் கானவன் செதொடை வெரீஇ -