பக்கம் எண் :


681


    போர்க்குதிரை பொங்குதல்: “தாங்கன்மின் றாங்கன்மின்றானைவிறன்மறவிர், ஓங்கன் மதிலு ளொருதனிமா - ஞாங்கர், மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றார், உயிருணிய வோடி வரும்” (பு. வெ. 90)

    6. அன்றையன்ன நட்பு: குறுந். 199:6; குறிஞ்சிப். 238 நற். 332:8; அகநா. 332:15; பெருங். 1.35:34.

    7. அழுங்கலூர்: குறுந். 12:6, 140:5, ஒப்பு. 276:8, 289:8.

(385)
  
(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றவேண்டுமென்று வற்புறுத்திய தோழியை நோக்கி, “மாலைக்காலத்தில் காமநோய் மிகுவதனால் துன்புறுகின்றேன்” என்று தலைவி கூறியது)
 386.    
வெண்மணல் விரிந்த வீததை கானற் 
    
றண்ணந் துறைவன் றணவா வூங்கே 
    
வாலிழை மகளிர் விழவணி கூட்டும் 
    
மாலையோ வறிவேன் மன்னே மாலை 
5
நிலம்பரந் தன்ன புன்கணொடு 
    
புலம்புடைத் தாகுத லறியேன் யானே. 

என்பது பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்து கூறியது (பி-ம். வன்பொறை யெதிரழிந்தது)

வெள்ளிவீதியார்.

    (பி-ம்.) 3. ‘விழவணிக்’; 5. ‘புன்கணொடும’்.

    (ப-ரை.) தோழி--, வெள் மணல் விரிந்த - வெள்ளிய மணல் பரவிய, வீததை கானல் - மலர்கள் செறிந்த சோலையையுடைய, தண்ணந் துறைவன் - தண்ணிய கடற்றுறையையுடைய தலைவன், தணவா ஊங்கு - என்னைப் பிரியாதமுன்காலத்தில், யான்--, வால் இழை மகளிர் - தூய அணிகலன்களை யணிந்த மகளிர், விழவு அணி கூட்டும் - விழவுக்குரிய அலங்காரங்களைத் தொகுக்கின்ற, மாலையோ அறிவேன் - மாலைக்காலத்தையே அறிவேனாயினேன்; மன் - இனி அது கழிந்தது! மாலை - அம்மாலைக் காலம், நிலம்பரந்தன்ன புன்கணொடு - பூமி பரந்தது போன்ற பெரியதுன்பத்தோடு, புலம்புடைத்து ஆகுதல் - தனிமையைஉடையதாதலை, அறியேன் - அப்பொழுது அறியேன்.

    (முடிபு) துறைவன் தணவாவூங்கு யான் மகளிர் அணி கூட்டும் மாலையோ அறிவேன்மன்! மாலை புலம்புடைத்தாகுதல் அறியேன்.

    (கருத்து) தலைவரது பிரிவினால் மாலையில் என்பால் துன்பம் மிக்கது.