வெள்ளிவீதியார். (பி-ம்.) 3. ‘விழவணிக்’; 5. ‘புன்கணொடும’்.
(ப-ரை.) தோழி--, வெள் மணல் விரிந்த - வெள்ளிய மணல் பரவிய, வீததை கானல் - மலர்கள் செறிந்த சோலையையுடைய, தண்ணந் துறைவன் - தண்ணிய கடற்றுறையையுடைய தலைவன், தணவா ஊங்கு - என்னைப் பிரியாதமுன்காலத்தில், யான்--, வால் இழை மகளிர் - தூய அணிகலன்களை யணிந்த மகளிர், விழவு அணி கூட்டும் - விழவுக்குரிய அலங்காரங்களைத் தொகுக்கின்ற, மாலையோ அறிவேன் - மாலைக்காலத்தையே அறிவேனாயினேன்; மன் - இனி அது கழிந்தது! மாலை - அம்மாலைக் காலம், நிலம்பரந்தன்ன புன்கணொடு - பூமி பரந்தது போன்ற பெரியதுன்பத்தோடு, புலம்புடைத்து ஆகுதல் - தனிமையைஉடையதாதலை, அறியேன் - அப்பொழுது அறியேன்.
(முடிபு) துறைவன் தணவாவூங்கு யான் மகளிர் அணி கூட்டும் மாலையோ அறிவேன்மன்! மாலை புலம்புடைத்தாகுதல் அறியேன்.
(கருத்து) தலைவரது பிரிவினால் மாலையில் என்பால் துன்பம் மிக்கது.