பக்கம் எண் :


684


(தலைமகள் தன்னுடன் வருதற்கு உடம்பட்டமையை உணர்ந்ததலைவன் பாலைநிலத்தின் இன்னாமையையும் அதில் நடக்க மாட்டாத தலைவியினது மென்மையையும் கருதிப் போதற்கு ஒருப்படானாக,“நும்மொடு வரின் தலைவிக்குப் பாலை இனியதாகும்” என்று தோழிகூறிச் செலவு உடம்படச் செய்தது.)
 388.    
நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளை 
    
கோடை யொற்றினும் வாடா தாகும் 
    
கவணை யன்ன பூட்டுப்பொரு தசாஅ 
    
உமணெருத் தொழுகைத் தோடுநிரைத் தன்ன 
5
முளிசினை பிளக்கு முன்பின் மையின் 
    
யானை கைமடித் துயவும் 
    
கானமு மினியவா நும்மொடு வரினே. 

என்பது தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை யுணர்ந்த தலைமகன்,சுரத்து வெம்மையும் தலைமகள் மென்மையும் குறித்துச் செலவு அழுங்கலுறுவானை (பி-ம். சொலவழுங்கலுறுவாளை)த் தோழிஅழுங்காமற் கூறியது.

    (அழுங்கலுறுவானைதவிர்தற்குத் தொடங்குபவனை)

ஒளவையார். (பி-ம். அவ்வையார்)

     (பி-ம்.) 1. ‘நீர்க்கால’்; 2. ‘யெற்றினும’்; 3. ‘தசாவது’; 4. ‘உமணரொழுகை’;5. ‘முழுச்சினை’.

    (ப-ரை.) நீர்கால் யாத்த - நீரைத் தன்னுடைய அடியிலே கட்டப்பெற்ற, நிரை இதழ் குவளை - வரிசையாகிய இதழ்களையுடைய குவளைமலரானது, கோடை ஒற்றினும் - மேல்காற்று வீசினாலும், வாடாதாகும் - வாடாததாகும்,கவணை அன்ன பூட்டு பொருது - கவணைப்போன்ற நுகத்தின் பிணிப்புப் பொருதமையால், அசா - வருந்துதலையுடைய, உமண் எருது ஒழுகை - உப்புவாணிகருடையஎருதுகள் பூட்டிய வண்டிகளின், தோடு நிரைத்தன்ன முளிசினை - தொகுதியை வரிசையாக வைத்தாற் போன்ற உலர்ந்தமரக்கிளைகளை, பிளக்கும் முன்பு இன்மையின் - பிளத்தற் ரிய வன்மை இல்லாமையால், யானை கை மடித்து உயவும் - யானை தன் துதிக்கையை மடித்து வருந்துகின்ற, கானமும் - பாலைநிலங்களும், நும்மொடு வரின் - நும்மோடு வந்தால், இனிய ஆம் - தலைவிக்கு இனிமை யுடையனவாகும்.

     (முடிபு) குவளை வாடாதாகும்; நும்மொடு வரின் - கானமும்இனிய ஆம்.