பக்கம் எண் :


686


  
“பிணையுங் கலையும்வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால் 
  
 அணையு முரம்பு நிரம்பிய வத்தமு மையமெய்யே 
  
 இணையு மளவுமில் லாவிறை யோனுறை தில்லைத்தண்பூம் 
  
 பணையுந் தடமுமன் றோநின்னொ டேகினெம் பைந்தொடிக்கே” 
  
    (திருச்சிற். 202);  
  
“மால்புரை யானை மணிமுடி மாறன்மண் பாய்நிழற்றும் 
  
 பால்புரை வெண்குடைத் தென்னன் பறந்தலைக் கோடிவென்ற 
  
 வேல்புரை வெம்மைய கான மெனினுமவ் வேந்தன் செய்ய 
  
 கோல்புரை தண்மைய வாநின்னொ டேகினெங் கொம்பினுக்கே.” 
  
                            (பாண்டிக்.) 
  
‘’மன்னெடு வேலினாய் மாழை மட நோக்கி 
  
 நின்னொடு செல்ல நெடுங்கானம் - கொன்னுனைய 
  
 வேலன்ன வெம்மைய வாயினும் வேந்தர்செங் 
  
 கோலென்ன லாகுங் குளிர்ந்து"      (கிளவிமாலை); 
  
“தீய பெருவனமுஞ் செந்தறையு நந்தறையும் 
  
 தூய பெருவனமுஞ் சோலையுமாம் - ய  
  
 கலம்பா முலைமகட்குக் காமருபூங் கண்ணிச் 
  
 சிலம்பாநின் பின்னர்ச் செலின்”    (கிளவித்தெளிவு.) 
(388)
  
(தலைவன் வரைவுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டதனைஅவனுடைய குற்றேவன்மகனால் அறிந்த தோழி அக்குற்றேவன் மகனை வாழ்த்தும் வாயிலாக அச்செய்தியைத் தலைவிக்கு உணர்த்தியது.)
 389.    
நெய்கனி குறும்பூழ் காய மாக 
    
ஆர்பதம் பெறுக தோழி யத்தை 
    
பெருங் கனாடன் வரைந்தென வவனெதிர் 
    
நன்றோ மகனே யென்றனென் 
5
நன்றே போலு மென்றுரைத் தோனே. 

என்பது தலைமகன் குற்றேவன்மகனால் வரைவுமலிந்த தோழிதலைமகட்குச்சொல்லியது.

வேட்டகண்ணன்.

     (பி-ம்.) 2. ‘யத்தைப’்; 3. ‘வந்தெதிர’்; 4. ‘யென்றலின’், ‘யென்றனன்’.

    (ப-ரை.) தோழி--, பெரு கல் நாடன் வரைந்தென - பெரிய மலைநாட்டையுடைய தலைவன் வரைவுக்குரியமுயற்சிகளை மேற்கொண்டானாக, அவன் எதிர் - அவனுக்குமுன், மகனே நன்றோ என்றனென் - குற்றேவன்மகனே,நலமா என்று கேட்டேன், நன்றே என்றுரைத்தோன் - நலமேஎன்று கூறிய அவன், நெய் கனி குறும்பூழ் - நெய் மிகஊறிய குறும்பூழ், காயமாக - சம்பாரத்தோடு கூடிய கறியாக,ஆர்பதம் பெறுக - உண்ணுகின்ற உணவைப் பெறுவானாக!