பக்கம் எண் :


688


பாடும் கேளாய் - ஒலியையும் கேள் ஆதலின், செல்லாதீம் - நீவிரிருவரும் போதலை ஒழிமின்.

     (முடிபு) சிறுபிடி துணையே, எல்லும் எல்லின்று; குரலின் பாடும் கேளாய்; செல்லாதீம்.

     (கருத்து) மேலே இந்நிலத்திற் செல்லுதலைத் தவிர்மின்.

     (வி-ரை.) பாடும்; உம்மை இறந்தது தழீஇயது. ஓ; அசை நிலை. தலைவன் வலியனாயினும் உடன்வருவாள் பொருட்டேனும் செலவுதவிர்தல் வேண்டுமென்பது கண்டோர் கருத்தாதலின் ‘சிறுபிடி துணையே’ என்றார்.

    பாலைநிலத்திற் செல்லும் வணிகர்கூட்டத்தை எதிர்த்து அவரது பொருளைக் கைக்கொள்ளல் ஆறலைகள்வர்க்கு இயல்பு. ஆறலைகள்வர் தண்ணுமை யொலியைக் கேளாயென்றது, அவரால் நுமக்கு ஏதம் வருமென்பதை அறிவுறுத்தியபடி. குரலே; ஏ அசை நிலை. குரலினது பாடும் கேளாயென இயைக்க.

    (மேற்கோளாட்சி) மு. இடைச்சுரத்துக் கண்டோர் பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவினாகிய குற்றம் காட்டியது (தொல். அகத். 40, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. எல்லும் எல்லின்று: குறுந். 161:1, 179:2, ஒப்பு.

    2. செல்லாதீம்: குறுந். 350:2, ஒப்பு.

    3. வேற்றுமுனை: அகநா. 67:11, 131:12.

    5. ஆறலை கள்வரின் தண்ணுமை: “வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கட், சேக்கோ ளறையுந் தண்ணுமை, கேட்குநள் கொல்லெனக் கலுழுமென் னெஞ்சே” (அகநா. 63:17-9).

    3-5. ஆறலை கள்வர் சாத்தெறிதல்: அகநா. 167:7-9, 245:6, 291:13-5; பெருங். 1.52:26, 5:47-9.

(390)
  
(பிரிவிடைப் பருவவரவின்கண் ஆற்றாளென வருந்திய தோழியை நோக்கி, “கார்காலம் வந்தது; மயில்கள் கூவின; அவை பேதைமையுடையன போலும்” என்று தலைவி கூறியது.)
 391.    
உவரி யொருத்த லுழாது மடியப் 
    
புகரி புழுங்கிய புயனீங்கு புறவிற் 
    
கடிதிடி யுருமிற் பாம்புபை யவிய 
    
இடியொடு மயங்கி யினிதுவீழ்ந் தன்றே 
5
வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர் 
    
கையற வந்த பையுண் மாலைப் 
    
பூஞ்சினை யிருந்த போழ்கண் மஞ்ஞை 
    
தாநீர் நனந்தலை புலம்பக் 
    
கூஉந் தோழி பெரும்பே தையவே.