பக்கம் எண் :


690


(தலைவன் வரைவு நீட்டித்தானாக அவன் சிறைப்புறத்தே நிற்குங்கால் தோழி வண்டினை நோக்கிக் கூறுவாளாகி, “தலைவி இன்னும் தன்வீட்டிலேயே உறைகின்றாளென்று சொல்வாயாக” என்றது).
 392.    
அம்ம வாழியோ வணிச்சிறைத் தும்பி 
    
நன்மொழிக் கச்ச மில்லை யவர்நாட் 
    
டண்ண னெடுவரைச் சேறி யாயிற் 
    
கடமை மிடைந்த துடவையஞ் சிறுதினைத் 
5
துளரெறி நுண்டுகட் களைஞர் தங்கை 
    
தமரிற் றீரா ளென்மோ வரசர் 
    
நிரைசெல னுண்டோல் போலப் 
    
பிரசந் தூங்கு மலைகிழ வோர்க்கே. 

என்பது வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.

தும்பிசேர் கீரனார் (பி-ம். தும்பிசோகினார்).

     (பி-ம்) (பி-ம்.) 1. ‘மணிச்சிறைத்’; 2. ‘யவர்நாட்டுத்தெண்ண’; 4. ‘கடவை’, ‘துடவைய’; 5. ‘துளிரெற’ி; 6. ‘தமராற’்; 7. ‘நிரைசேர் நுண்டேர்போல’;8. ‘மலைகிழவோற்கே’.

    (ப-ரை.) அணி சிறை தும்பி - அழகிய சிறகுகளையுடைய தும்பியே, அம்ம - ஒன்று கூறுவன் கேட்பாயாக,நல் மொழிக்கு அச்சம் இல்லை - நல்ல மொழிகளை ஒருவர்பால்கூறுந்திறத்தில் அச்சம் இல்லை, அவர் நாடு - அத்தலைவருடய நாட்டிலுள்ள, அண்ணல் நெடு வரை சேறி ஆயின் - தலமையையுடைய உயர்ந்த மலைக்குச் செல்வாயாயின்,ரசர் நிரை செலல் நுண் தோல் போல - அரசர்களது வரிசையாகச் செல்லுதலையுடைய நுண்ணிய கேடகங்களைப் போல,பிரசம் தூங்கும் மலைகிழ வோர்க்கு - தேனடைகள் தொங்குகின்ற மலையையுடைய தலைவரிடத்தில், கடமை மிடைந்த -கடமை மான்கள் நெருங்கிய, துடவை அம் சிறுதினை - தோட்டத்திலுள்ள அழகிய சிறுதினையிடத்தே, துளர் எறிநுண்துகள் களைஞர் தங்கை - களைக்கொட்டை எறிவதனால்உண்டாகிய நுண்ணிய புழுதியையுடைய களையெடுப்பாருடைய தங்கையாகிய தலைவி, தமரின் தீராள் - தன் சுற்றத்தாரிடத்தினின்றும் நீங்காளாயினாள்; என்மோ - என்றுகூறுவாயாக.