கபிலர். (ப-ரை.) யாமத்து - நடு இரவின் கண், கருவி மா மழை - தொகுதியையுடைய பெரிய மழை, வீழ்ந்தென - பெய்தலால், அருவி விடரகத்து இயம்பும் - நீர் பெருகி அதனால் அருவியானது பின்நாளிலும் மலைமுழைஞ்சுகளில் ஒலிக்கும், நாட - குறிஞ்சி நிலத்தையுடையவனே, காமம் ஒழிவது ஆயினும் - காமமானது நீங்குவதாக இருப்பினும், நின்வயினான் - நின்னிடத்தில், எம் தொடர்பும் தேயுமோ - எமக்குள்ள நட்பும் அழியுமோ? அழியாது.
(முடிபு) நாட, காமம் ஒழிவதாயினும் நின்வயினான் எம் தொடர்பும் தேயுமோ?