பக்கம் எண் :


98


  
“பிரியா ரெனவிகழ்ந் தேன்முன்னம் யான்பின்னை யெற்பிரியிற் 
  
  றரியா ளெனவிகழ்ந் தார்மன்னர் தாந்தக்கன் வேள்விமிக்க 
  
  எரியா ரெழிலழிக் கும்மெழி லம்பலத் தோனெவர்க்கும் 
  
  அரியா னருளிலர் போலன்ன வென்னை யழிவித்தவே”                                         (திருச்சிற். 340) 
  
“செல்லா ரவரென் றியானிகழ்ந் தேன்சுரஞ் செல்லத்தன்கண் 
  
 ஒல்லா ளவளென் றவரிகழந் தார்மற் றுவையிரண்டும் 
  
 கொல்லா ரயிற்படைக் கோனெடு மாறன் குளந்தைவென்ற 
  
 வில்லான் பகைபோ லெனதுள்ளந் தன்னை மெலிவிக் குமே”                                     (பாண்டிக்கோவை)  
(43)
  
(தலைவி தலைவனுடன் போனபின்பு அவர்களைப் பாலை நிலத்திற்றேடிச் சென்ற செவிலி அவர்களைக் காணாமல் வருந்திக் கூறியது.)
 44.    
காலே பரிதப் பினவே கண்ணே  
    
நோக்கி நோக்கி வாளிழந் தனவே 
    
அகலிரு விசும்பின் மீனினும் 
    
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. 

என்பது இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது.

    (இடைச்சுரத்து - பாலைநிலத்தின் இடையில்)

வெள்ளி வீதியார்.

    (பி-ம்.) 1. ‘வென்கண்ணே’.

    (ப-ரை.) கால் பரி தப்பின - என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன; நோக்கி நோக்கி கண் வாள் இழந்தன - இணைந்து எதிர் வருவாரைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன; மன்ற - நிச்சயமாக, இ உலகத்து - இந்த உலகத்தில், பிறர் - நம்மகளும் அவள் தலைவனும் அல்லாத பிறர், அகல் இரு விசும்பின் மீனினும் பலர் - அகன்ற பெரிய வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் பலராவர்.

    (முடிபு) கால் பரிதப்பின; கண் வாள் இழந்தன; பிறர் பலர்.

    (கருத்து) தலைவியையும் தலைவனையும் நான் கண்டேனில்லை.

    (வி-ரை.) நோக்கி நோக்கி யென்றதற்கேற்ப நடந்து நடந்தென்பது வருவித்துரைக்கப்பட்டது. முதுமையை யுடையாளாதலினாலும் பாலை நிலம் நடத்தற்கு அரியதாதலினாலும் நடந்து நடந்து செவிலிக்குக் கால் ஓய்ந்தன. பரி - நடை (மதுரைக். 689, ந.) பொருள்களை நெடுநேரம் வெயிலில் கூர்ந்து நோக்கின் கண் ஒளி மழுங்குதல் இயல்பு. பாலையில் நெடுந் தூரத்தில் ஆணும் பெண்ணுமாக இணைந்துடன் வருவாரை நோக்கி, ‘இவர் நம் மகளும் அவள் தலைவனும் போலும்’ என்று எண்ணி அவரையே