பக்கம் எண் :


109


வந்தது (தொல். களவு.9,ந.); காமக்கிழத்தியர் நலம்பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின்கண் தலைவி கூறியது. (தொல். கற்பு.6, ந.).

    ஒப்புமைப் பகுதி 1. முண்டகத்தின் முள்: குறுந். 51:1. 5. நெஞ்சு நேர்பவள் : ஐங். 151:5.

    3-5. மறுமையிலும் கணவனும் மனைவியுமாதல்: (குறுந். 199: 5-8); ‘தன் துணையாக - இம்மை மறுமைக்குத் துணையாக’ (கலி. 69:4, ந.) “எமர்தர வாரா தாயினு மிவணோற், றவனுறை யுலகத் தழித்துப்பிறந்தாயினும், எய்துதல் வலித்தனென்” (பெருங். 1.36:113-5); “மறப்பானடுப்பதொர் தீவினை வந்திடிற் சென்றுசென்று, பிறப்பானடுப்பினும் பின்னுந்துன் னத்தகும் பெற்றியரே” (திருச்சிற். 205.)

(49)
(பரத்தையிற் பிரிந்த தலைவனால் விடப்பட்ட தூதுவரை நோக்கி, “அவர் விளையாடும் துறை அழகு பெற்றது; அவர் மணந்த தோள் மெலிவுற்றது” என்று தலைவி கூறியது.)
 50.   
ஐயவி யன்ன சிறுவீ ஞாழல் 
    
செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்  
    
துறையணிந் தன்றவ ரூரே யிறையிறந் 
    
திலங்குவளை நெகிழச் சாஅய்ப் 
5
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. 

என்பது கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது.

குன்றியனார் (பி-ம். குன்றியான், குன்றியாள்.)

    (பி-ம்.) 2. ‘செவ்வி’.

    (ப-ரை.) ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் - வெண்சிறு கடுகைப் போன்ற சிறிய பூக்களையுடைய ஞாழல் மரத்தின் பூ, செ வீ மருதின் செம்மலொடு - செம்மையாகிய மலர்களையுடைய மருத மரத்தின் பழம்பூவோடு, தாஅய் - பரந்து, அவர் ஊர் - தலைவருடைய ஊரின் இடத்தில், துறை - நீர்த் துறையை, அணிந்தன்று - அழகு செய்தது; அவர் மணந்த தோள் - அவர் முன்பு அளவளாவிய என் தோள், இலங்குவளை - விளங்கும் வளையல்கள், இறை இறந்து நெகிழ - மூட்டுவாய்ச் சந்தைக் கடந்து நெகிழும்படி, சாஅய் - மெலிந்து, புலம்பு அணிந்தன்று - தனிமையையே அழகாகப் பெற்றது.

    (முடிபு) ஞாழல் தாஅய் அவர் ஊரில் துறையை அணிந்தன்று; அவர் மணந்ததோள் புலம்பணிந்தன்று.

    (கருத்து) அவர் என்னைப் புறக்கணித்தமையால் நான் மெலிந்தேன்.

    (வி-ரை.) சிறுவீயென்பதும் செவ்வீயென்பதும் முதற் கேற்ற அடைகள். ஞாழலின்பூச் சிறியது என்பது, “நனைமுதிர் ஞாழற் சினைமரு