பக்கம் எண் :


128


(தலைவனது பிரிவையாற்றாத தலைவி தோழியை நோக்கி, "தலைவர் என்னோடு அளவளாவாம லிருப்பினும் அவரைக் காணுமாத்திரத்தில் எனக்கு இன்பம் பிறக்கும்; அஃதும் இப்பொழுது இலதாயிற்று" என்று கூறியது.)
 60.   
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் 
    
பெருந்தேன் கண்ட விருக்கை முடவன் 
    
உட்கைச் சிறுகுடைஐ கோலிக் கீழிருந்து 
    
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் 
5
நல்கார் நயவா ராயினும் 
    
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே. 

என்பது பிரிவிடை யாற்றாமையிற் றலைமகள் தோழிக்குரைத்தது.

பரணர்.

    (பி-ம்) 1. கூதளிராடிய, கூதாளி, பருவரைப்; 2.இருகை, இருங்கை; 3.உட்குழி சிறுகுடை, 4.நீட்டுபுநக்கி, உருட்டுபுநக்கி; 3-4 கீழிருந்தூட்டுபு.

    (ப-ரை.) தோழி---, குறு தாள் கூதளி - குறிய அடியையுடைய; கூதளஞ்செடி, ஆடிய நெடு வரை - அசைந்த உயர்ந்த மலையிலுள்ள, பெரு தேன் கண்ட - பெரிய தேனடையைக் கண்ட, இருக்கை முடவன் - காலின்மையின் எழுந்து நிற்றற்கு இயலாமல் இருத்தலையுடைய முடவன், உள் கை சிறுகுடை - உள்ளங்கையாகிய சிறிய குவிந்த பாத்திரத்தை, கோலி - குழித்து, கீழ் இருந்து - அம்மலையின் கீழே இருந்தபடியே, சுட்டுபு - அத்தேனிறாலைப் பலமுறை சுட்டி, நக்கியாங்கு - உள்ளங்கையை நக்கி இன்புற்றதைப் போல, காதலர் - தலைவர், நல்கார் நயவார் ஆயினும் - தண்ணளி செய்யாராயினும் விரும்பாராயினும், பல்கால் காண்டலும் - பலமுறை பார்த்தலும், உள்ளத்துக்கு இனிது - எனது நெஞ்சிற்கு இனிமை தருவது.

    (முடிபு) காதலர் நல்கார் நயவாராயினும் பல்காற் காண்டலும் இனிது.

    (கருத்து) தலைவரைக் காணாதிருத்தல் துன்பத்தைத் தருவதாயிற்று.

    (வி-ரை.) தோழியென்னும் விளி வருவித்துரைக்கப் பட்டது. கூதளி - இது கூதாளியெனவும், கூதளம், கூதாளமெனவும் வரும்; கூதாளியென்பதே புணர்ச்சிக்கண் அம்முப் பெற்றும் குறுகியும் வருமென்பர் நச்சினார்க்கினியர் (தொல். உயிர்மயங்கு. 44); இதன் மலர் வெண்ணிற முடையது (முருகு. 192); கூதிர்ப் பருவத்தில் அலர்வது (நற். 244:2).

    பெருந்தேன்: குறுந். 3:4, வி-ரை. காலுடையாரும் ஏறுதற்கரிதென்பாள் நெடுவரை யென்றாள். குடை - பனையோலையாற் செய்யப்பட்டு