சிறைக்குடி யாந்தையார். (பி-ம்) 2.நாறிணர்க், டிடைபட, டிடையிடுபு; 4.நறியணல்லோள்; 5.வாயது, முயங்குக வின்னே, முயங்குவமினியே, முயங்குக மினியே .
(ப-ரை.) நெஞ்சே, கோடல் - காந்தள் மலரையும், எதிர்முகை பசு வீ முல்லை - தோற்றிய அரும்பிலிருந்து உண்டாகிய செவ்வி மலர்களாகிய முல்லைப்பூக்களையும், நாறு இதழ் குவளையொடு - மணக்கின்ற இதழ்களையுடைய குவளைமலர்களோடு, இடைப்பட விரைஇ - இடையிடையே பொருந்தும்படி கலந்து, ஐது தொடைமாண்ட - அழகிதாகத் தொடுத்தல் மாட்சிமைப்பட்ட, கோதைபோல - மாலையைப்போல, நறிய நல்லோள் மேனி - நறு நாற்றத்தை