பக்கம் எண் :


132


யுடைய தலைவியது மேனியானது, முறியினும் வாய்வது - தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் பொருந்தியது; முயங்கற்கும் இனிது - தழுவுதற்கும் இனியது.

    (முடிபு) நெஞ்சே, நல்லோளது நறிய மேனி முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிது.

    (கருத்து) தலைவியை முன்பு தழுவி இன்புற்றதுபோல இப்பொழுதும் இன்புறுவேன்.

    (வி-ரை.) எதிர்தல் - தோன்றுதல்(கலி. 117:3, ந.); பருவத்தை நேர்தல் (ஐந். ஙூம். 31, உரை). பசுவீ - செவ்விப் பூ; பசுமை நிறத்தின்கண் செல்வதன்று; 'பைங்காந்தள் - செவ்விக்காந்தட்பூ' (திருச்சிற். 1, பேர்.) என்பதைப் பார்க்க. மேனியின் இயலைக் கூறினான், இயற்கைப் புணர்ச்சிக்கட் பழகியவனாதலின். இனிதே: ஏகாரம் அசைநிலை.

    (மேற்கோளாட்சி) மு. தலைவன் பிரிந்துழிப் பெருகிய சிறப்பின்கண் அவனுக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு. 5, இளம்.);1. புணர்ந்துழி மகிழ்ந்து கூறியது (தொல். அகத். 14, களவு. 6, ந.); இயற்கைப்புணர்ச்சிக்கண் வந்தது (தொல். செய்.186, ந.); முயங்குதலுறுத்தல் (நம்பி. 127); மெய்யுறு புணர்ச்சி (இ.வி. 405).

    ஒப்புமைப் பகுதி 1. எதிர்முகை: "எதிர்மலர்" (நான்மணி. காப்பு.); நற்.52:2. பசுவீ முல்லை: குறுந். 221:5.

    1-4. தலைவியின் மேனி மலர்களின் மணத்தையுடைமை: (குறுந். 84: 4-5, 168: 1-4); "பொய்கைப் பூவினு நறுந்தண் ணியளே" (ஐங். 97:4). தலைவியின் மேனிக்கு மலர்மாலை உவமை: (குறுந். 84: 4-5, 168: 1-4, 229:6); "திருவளர் தாமரை சீர்வளர் காவிகளீசர்தில்லைக், குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்கு தெய்வ, மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந், துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே" (திருச்சிற். 1); "பேதையைப் பெச்சியலைப் பெய்வளையை யென்மார்பிற், கோதையை" (பு.வெ. 255).

    4-5. தலைவிமேனிக்கு முறி உவமை: (குறுந். 222:7); "முறிமேனி..... வேய்த்தோ ளவட்கு" (குறள். 1113).5. தலைவி மேனியின் நறுமை, மென்மை, இனிமை: குறுந். 70: 2-5.

(62)
  
(பொருள் தேடவேண்டுமென்று துணிந்த நெஞ்சை நோக்கி, "பொருள் தேடச் செல்லின் தலைவியைப் பிரிய வேண்டும்; அவளைப் பிரிவது அரிது" என்று உணர்த்தித் தலைவன் செலவு தவிர்ந்தது.)
 63.   
ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்  
    
செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்  
    
கம்மா வரிவையும் வருமோ 
    
எம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே  
  
 1. 
இக்கருத்து, சிறப்புடையதாகத் தோற்றுகின்றது.