மள்ளனார். (பி-ம்.) 1.தலம்வருந்.
(ப-ரை.) தேமொழி - இனிய மொழியினையும், திரண்ட மெல்தோள் - பருத்த மெல்லிய தோளினையும் உடைய, பரீஇ வித்திய ஏனல் - பருத்தியை இடையிலே விதைத்த தினைமுதிர்ந்த புனத்தின்கண், குரீஇ ஓப்புவாள் - அத்தினையை உண்ணவரும் குருவியினங்களை ஓட்டு கின்றவளது, பெரு மழை கண் - பெரிய குளிர்ச்சியையுடைய