பக்கம் எண் :


149


    ஏனலிற் குருவி யோட்டுதல்: "உளைக்குரற் சிறுதினை கவர்தலிற் கிளையமல், பெருவரை யடுக்கத்துக் குரீஇ யோப்பி" (அகநா. 388: 4-5).

    2-5. கண் நோய் செய்தல்: "தேம்பாய வவிழ்நீலத் தலர்வென்ற வமருண்கண்... நிறம்பாய்ந்த, கணையினு நோய்செய்தல் கடப்பன்றோ கனங்குழாய்", "நீரலர் நீல மெனவவர்க் கஞ்ஞான்று, பேரஞர் செய்தவென் கண்" (கலி. 57: 9-15, 143: 50-51); "நிறைமதி வாண்முகத்து நேர் கயற்கண் செய்த, உறைமலி யுய்யா நோய்" (சிலப். 7:8); "கருநெடுங் கண்டருங் காம நோயே" (பழம்பாடல்); "சேற்றுக்கானீலஞ் செருவென்ற வேந்தன்வேல், கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல், தோற்றந் தொழில்வடிவு தம்முட் டடுமாற்றம், வேற்றுமை யின்றியே யொத்தன மாவேடர், ஆற்றுக்கா லாட்டியர் கண்" (யா. வி. 62, மேற்.) 1-5. கண்ணிற்குப் பூ: குறுந். 101:4, ஐங்.16:4, கலி. 28:18, 33: 9, 39:51, 75:31. 142:11. கண் அலமருதல்: "அலமர லுன்கண்ணார்", "அலமர லமருண்க ணந்நல்லாய்" (கலி. 73:12, 113:2)

(72)
  
(தலைவன் பகலில் வருவதை மறுத்துரைத்து இரவில் வரச் செய்து பின்னர் அதனையும் மறுத்து தோழி, வரைந்து கொள்ளும் பொருட்டு அங்ஙனம் செய்வதன் இன்றியமையாமையைத் தலைவிக்குக் கூறியது.)
 73.   
மகிழ்நன் மார்பே வெய்யை யானீ 
    
அழியல் வாழி தோழி நன்னன் 
    
நறுமா கொன்று நாட்டிற் போகிய 
    
ஒன்றுமொழிக் கோசர் போல 
5
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே. 

என்பது பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் (பி-ம். 'இரவுக்குறி நேர்ந்த துறவும்') மறுத்தமைப்படத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

பரணர்.

    (பி-ம்) 1.வேயையவர்நீ, வெய்யையேநீ; 3.ஞாட்பிற், போக்கிய; 5.வேண்டுமால்.

    (ப-ரை.) தோழி---, மகிழ்நன் மார்பே - தலைவனது மார்பையே, நீ வெய்யை - நீ விரும்புதலுடையை; நன்னை நறு மா கொன்று - நன்னனது காவன்மரமாகிய நறிய மாமரத்தை வெட்டி, நாட்டில் போகிய - அவனது நாட்டினுட்புக்க, ஒன்று மொழி கோசர் போல - வஞ்சினத்தையுடைய கோசரைப் போல, சிறிது - சிறிதளவு. வன்கண் சூழ்ச்சியும் - வன்கண்மையையுடைய ஆராய்ச்சியும், வேண்டும்--; அழியல் - அதன் பொருட்டு வருந்தற்க.

    (முடிபு) தோழி, நீ மகிழ் நன்மார்பே வெய்யை; சிறிது சூழ்ச்சியும் வேண்டும்; அழியல்.