குடவாயிற் கீரனக்கன் (பி-ம். கீரத்தனார்.) (பி-ம்) 6. ‘சேர்ந்தனர்’ 7. ‘கொல்லோமென்ற’ 8. ‘சொல்லாதேகல்’.
(ப-ரை.) தோழி, யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பல் - யாம் தாம் பிரிவதற்குப் பொருந்தேமென்ற தவற்றினால், சொல்லாது அகறல் வல்லுவோர் - சொல்லாமற் செல்லுதலில் வன்மையுடையோராகிய தலைவர், கானம் யானை - காட்டு யானையால், தோல் நயந்து உண்ட - பட்டை விரும்பி உண்ணப்பட்ட, பொரிதாள் ஓமை - பொறந்த அடியையுடைய ஓமைமரத்தினது, வளிபொரு நெடுசினை அலங்கல் உலவை - காற்று அடிக்கும் நெடிய கிளையினது அசைதலையுடைய வற்றற்கொம்பில், ஏறி -, ஓய்என - ஒய்யென்று, புலம்புதரு குரல - தனிமையையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தும் குரலையுடையனவாகி, புறவு பெடை பயிரும் - ஆண்புறாக்கள் பெண்புறாக்களை அழைக்கும், அத்தம் நண்ணிய - பாலைநிலத்திற் பொருந்திய, அம் குடி சிறு ஊர் - அழகிய குடிகளையுடைய சிற்றூரில், சேந்தனர் கொல் - தங்கினரோ?
(முடிபு) சொல்லாதகறல் வல்லுவோர் சேந்தனர்கொல்?
(கருத்து) தலைவர் இனி மீளாரோ?
(வி-ரை.) பாலைநிலத்தின் வெம்மையால் யானை ஓமை மரத்தின் தோலை உண்டது. புலம்பு - தனிமையும் வருத்தமும்.