பக்கம் எண் :


164


வையிலைவேற் காளை, விடையாயங் கொள்கென்றான் வேந்து” (பு.வெ.1.) 6-7.நிரைகாத்தல்: “ஆதந் தோம்பல்” (தொல். புறத்.2)

    7. கொழுநன் மார்பைக் காத்தல்: “மார்புநனி விலக்க றொடங்கி யோளே” (ஐங்.42:4). கிளையொடுங் காத்தல்: “நின் கிளையொடு போகென்று தத்தம், கொழுநரைப் போகாமற் காத்து” (கலி. 109:25-6.)
 மு 
“அரியார் மதர்விழி யாயமுந் தானு மகன்றுறைவாய்  
  
 விரியார் கருங்கழன் மன்புறங் காப்பினு மென்புறமே 
  
 புரியா தொழுகுவ னேலழி யாத புகழ்படையாக் 
  
 கரியார் திருவிற் றரியா துடைகவென் கைச்சங்கமே"    (அம்பிகாபதிகோவை, 476) 
(80)
  
(பாங்கியின் வாயிலாகத் தலைவியோடு அளவளாவப்பெற்ற தலைவன் பிரியும் காலத்தில் அவனை நோக்கி, “நின்னுடைய குறையை நான் முடித்து வைத்தேன்; தலைவி நின்னோடு ஒன்றினள்; இனி நீ அதோ தெரியும் எம் ஊர்க்கண்ணும் வந்து பழகுவாயாக” என்று தோழி கூறியது.)
 81.    
இவளே, நின்சொற் கொண்ட வென்சொற்றேறிப்  
    
பசுநனை ஞாழற் பல்சினை யொருசிறைப் 
    
புதுநல னிழந்த புலம்புமா ருடையள் 
    
உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் 
5
நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் 
    
கடலுங் கானலுந் தோன்றும் 
    
மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே. 

என்பது தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது.

வடமவண்ணக்கன் பேரிசாத்தன் (பி-ம். வடமவண்ணக்கர், வடமவண்ணக்கன்).

    (பி-ம்) 2. ‘பல்கிளை’ 3. ‘னிழந்து’ 5. ‘புலவுதிரைக்’ 7. ‘மடல்சழ்’, ‘பெண்ணையஞ்’.

    (ப-ரை.) வெற்ப, இவள் - இத்தலைவியானவள், நின் சொல் கொண்ட என் சொல் - குறையுறும் நின்சொற்களை ஏற்றுக்கொண்டு தன்னிடத்துக் கூறிய என் சொற்களை, தேறி - தெளிந்து, பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை - பசிய அரும்புகளையுடைய ஞாழல் மரத்தினது பல கிளைகள் அடர்ந்த ஒரு பக்கத்து, புது நலன் இழந்த - இதுகாறும் புதியதாக இருந்த தன் பெண்மை நலத்தை இழந்தனாலுண்டான, புலம்பு உடையள் - தனிமையையுடையள்; நிலவும் இருளும் போல - நிலவையும் அதனோடு நின்ற