பக்கம் எண் :


166


    “தலைவி தானாக விரும்பி இதனைச் செய்திலள்; நான் கூறினமையின் இது செய்தாள். நானும் நீ குறைவேண்டி இரந்தமையின் அவளை நயக்கச் செய்தேன். ஆதலின் அவள் நலனிழந்தமைக்கு நின் முயற்சியே காரணமாவது. இனி நீ அவள் துயருறாவாறு அவ்வூரினிடத்தும் வந்து அளவளாவுக” என்று தோழி கூறினாள்.

    (மேற்கோளாட்சி) மு. இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாகுமென்று அறிவுறுத்தவழிப் பின்னும் புணர்ச்சி வேண்டிய தலைவற்குத் தோழி இடமுணர்த்தியது (தொல். களவு. 24, இளம்.); பாங்கியிற் கூட்டத்தின் பின் முற்காலத்துப் பணிந்து பின்னின்றோனைத் தோழி தானே பணிந் தொழுகுமிடத்து அவளுக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். களவு. 23, ந.); தோழிக்குத் தலைவி தனது வேட்கையை எதிர்நின்று கூறியது (தொல். களவு, 27, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. ஞாழல்: குறுந். 183:5, 296:2.

    3. தலைவி புதுநலம் இழத்தல்: “பூவி னன்ன நலம்புதிதுண்டு” (நற். 15:4); “பொன்மாலை மார்பனென் புதுநலமுண் டிகழ்வானோ” (தே. திருநா. திருப்பழனம்). மார்: ஐங். 44:4. 2-3. கடற்கரையில் தலைவனும் தலைவியும் அளவளாவுதல்: (குறுந். 97:1-2); “கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளை” “ஆய்மலர்ப் புன்னைக் கீழணி நலந் தோற்றாளை”, “திகழ் மலர்ப் புன்னைக் கீழ்த் திருநலந்தோற்றாளை (கலி. 135: 6, 9, 12.)

    4. உதுக்காண்: குறுந். 191:1, 358:4. தொல். உயிர். 61, ந. ஐங். 101:1. தெய்ய: அசை; ஐங்.64:5.

    5-6. கானற் சோலைக்கு இருள்: “இருடிணிந் தன்ன வீர்ந்தண் கொழுநிழல்” (குறுந். 123:1); “பொழிலே, இரவோ ரன்ன விருளிற் றாகியும்” (யா.வி. 69, மேற்.) கடலுக்கும் கானலுக்கும் நிலவும் இருளும்: “நிலவு மிருளும் போல நெடுங்கடற், கழியுங் கானலு மணந்தன்று” (தொல். களவு. 23, ந. மேற்.) நிலவும் இருளும்: குறுந். 123: 1-2; திணைமா. 29.

    7. சிறுநல்லூர்: குறுந். 55:5; அகநா. 394:16. 4 - 7. உதுக்காண்.... சிறுநல்லூரே: “ஈகாண் டோன்றுமெஞ் சிறுநல்லூரே” (நற். 264:9); “உவக்காண் டோன்றுமெஞ் சிறுநல் லூரே” (அகநா. 350:15.)

    மடல்தாழ் பெண்ணை: ஐங்.114.

(81)
  
(தலைவன் தான் வருவதாகக் கூறிச் சென்ற முன்பனிப் பருவம் வரவும் அவன் வாராமையினால் வருத்தமுற்ற தலைவியை நோக்கி, “நீ வருந்தற்க; அவர் தலையளி செய்து பிரிந்த அன்புடையவராதலின் விரைவில் வருவர்” என்ற தோழியை நோக்கி, “அவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது வந்திலராதலின் அவர் தன்மை மாறியது போலும்!” என்று தலைவி கூறியது.)