வடமன் (பி-ம். வடமவண்ணக்கன்) தாமோதரன். (பி-ம்) 3. ‘லிழையர்’
(ப-ரை.) உள் ஊர் குரீஇ - ஊரினுள் இருக்கும் குருவியின், துள்ளு நடை சேவல் - துள்ளிய நடையை யுடைய ஆண்பறவையானது, சூல் முதிர் பேடைக்கு - கருப்பம் முதிர்ந்த பெண் குருவிக்கு, ஈன் இல் - பொறை யுயிர்த்தற்குரிய இடத்தை, இழைஇயர் - அமைக்கும் பொருட்டு, தேம் பொதி கொண்ட - தேன் பொதிதலைக் கொண்ட, தீ கழை கரும்பின் - இனிய கோலை உடைய கரும்பினது, நாறா வெண் பூ - மணம் வீசாத வெள்ளிய