பக்கம் எண் :


178


    ஒப்புமைப் பகுதி 1. மன்றமராஅம்: தஞ்சை. 307. மராமரத்திலுள்ள கடவுள்: கலி. 101:14-5; தஞ்சை. 132. 1-2.கடவுள் கொடியோரைத் தெறுதல்: பரி.8: 65-8; சிலப்.5: 128-34.

    4. நுதல் பசத்தல்: குறுந்: 48:5, 205:7, நற்.73:10, 108:8, 133:3, 167:11. 247:7-8, 288:5, 322:9, 368:7, 388:1-3; ஐங்.55:4, 67:5, 105:4, 107:2, 219:4, 222:4; கலி. 28:15; அகநா.102:19, 235:17, 376:13.

    5. தோள் நெகிழ்தல்: குறுந். 77:6, 90:7, 111:1, 210:5, 239:1, 357:2, 377:2, 381:1, நற்.130:7, 131:9, 237:1; ஐங்.39:3, 133:3; அகநா. 1:8, 41:1-2, 169:13, 270:4, 4-5.நுதல் பசத்தலும் தோள் நெகிழ்தலும்: குறுந். 185:1-2; நற். 151:1, 197:1-2. அகநா.85:1, 171:1-3, 307:1.

(87)
  
(“தலைவன் இரவுக்குறியை விரும்புகின்றான்: இனி இரவிலே வருவான்” என்று தோழி தலைவிக்குக் கூறியது.)
 88.    
ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன்  
    
சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித் 
    
தொன்முரண் சோருந் துன்னருஞ் சாரல் 
    
நடுநாள் வருதலும் வரூஉம் 
5
வடுநா ணலமே தோழி நாமே. 

என்பது இரவுக்குறி நேர்ந்த வாய்ப்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது

மதுரைக் கதக்கண்ணன்.

    (பி-ம்) 3. ‘கொல்லுந்’, ‘சொல்லுந்’, ‘துன்னருஞ் சோலை’.

    (ப-ரை.) தோழி-----, ஒலி வெள் அருவி - ஒலிக்கும் வெள்ளிய அருவியையுடைய, ஓங்கு மலைநாடன் - உயர்ந்த மலைகளுள்ள நாட்டையுடைய தலைவன், சிறு கண் பெருகளிறு - சிறிய கண்ணையுடைய பெரிய களிறு, வய புலி தாக்கி - வலியையுடைய புலியை எதிர்த்துப் பொருது, தொல் முரண் சோரும் - தனது பழைய வலி சோர்தற்கிடமாகிய, துன் அரு சாரல் -மக்கள் அடைதற்கரிய சாரலின் வழியே, நடுநாள் வருதலும் வரூஉம் - இடையிரவில் வருதலையும் செய்வான்; நாம் வடு நாணலம் - அங்ஙனம் அவன் வருதலி னால் நமக்கு உண்டாகும் பழிக்கு நாம் நாணேம்.

    (முடிபு) தோழி, மலைநாடன் வருதலும் வரூஉம்; நாம் வடு நாணலம்.

    (கருத்து) தலைவர் இனி இரவில் வந்து அளவளாவுவர்.