தாமோதரன். (பி-ம்) 3. ‘மரத்த’, ‘மாத்த’, ‘மராத்த’; 5.’இரை கொண்டவையும்’
(ப-ரை.) ஞாயிறு பட்ட - கதிரவன் மறைந்த, அகல் வாய் வானத்து - அகன்ற இடம் பொருந்திய ஆகாயத்தில், கொடு சிறை பறவை - வளைந்த சிறகுகளையுடைய பறவைகள், இறை உற ஓங்கிய - தாம் தங்கும்படி உயர்ந்த, நெறி அயல் மரா அத்த - வழியின் அயலில் வளர்ந்த கடம்பின்கண் உள்ள கூட்டிலிருக்கும், பிள்ளை - குஞ்சுகளின், உள் வாய் செரீஇய - வாயினுள்ளே செருகும் பொருட்டு, இரை கொண்டமையின் - இரையைத் தம் அலகில் எடுத்துக் கொண்டமையால், செலவு விரையும் - விரைந்து செல்லும்; அளிய - அவை இரங்கத்தக்கன.
(முடிபு) பறவை செலவு விரையும்; அளிய.
(கருத்து) மாலைக்காலம் வந்தது; இனிக் காமநோயை ஆற்றேன்.
(வி-ரை.) படுதல் - மறைதல்; “படுசுட ரமையம்” (அகநா, 48:23) என்பது காண்க.