கந்தக் கண்ணன் (பி-ம். கதக் கண்ணன்) (பி-ம்) 4.’கேட்டிற்’; 6. ‘மலைத்தக்க’.
(ப-ரை.) தோழி-----, பெரு தண் மாரி - பெரிய தண்மை யையுடைய மழைக்காலத்துக்குரிய, பேதை பித்திகத்து அரும்பு - அறிவின்மையையுடைய பிச்சியின் அரும்புகள், முன்னும் மிக சிவந்தன - தாம் சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்பே மிகச் சிவந்தன; யானே மருள்வேன் - அவற்றைக் கண்டு இது கார்ப் பருவமென்று நானா மயங்குவேன்? மயங்கேன்; ஆயினும், பிரிந்திசினோர் - என்னைப் பிரிந்திருப்பவராகிய, இன்னும் தமியர் - இன்னும் என்பால்