பக்கம் எண் :


193


     பித்திகத்தின் அரும்பு மாரிக்காலத்துக்கு உரித்தாதலும் சிவந் திருத்தலும்: “மலிபெயற் கலித்த மாரிப் பித்திகத்துக், கொயலரு நிலைய பெயலேர் மணமுகைச், செவ்வெரிந்” (அகநா. 42: 1-3.)

    3. பானாள்: குறுந்.142:3, 145:3, 301:4, 311:4, 355:4, 375:5, கலி. 30:9.

    6. அருவி தத்தல்: “தத்துற்று... இழுமென விழிதரு மருவி” (முருகு. 305-16.) தத்த - தாவ; தஞ்சை.26.

     கருவி மாமழை: குறுந். 42:2, ஒப்பு; நைடதம், நாட்டு, 1.

     மழைக் குரல்: “மழைமுழங்கு கடுங்குரல்” (குறுந். 396:6)

(94)
  
(தனது வேறுபாடு கண்டு வினாவிய பாங்கனுக்கு, “ஒரு குறமகள்பாற் கொண்ட காமத்தால் என்கண் இஃது உண்டாயிற்று” என்று தலைவன் கூறியது.)
 95.    
மால்வரை யிழிதருந் தூவெள்ளருவி  
    
கன்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரற் 
    
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள் 
    
நீரோ ரன்ன சாயல் 
5
தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே. 

என்பது தலைமகன் பாங்கற்கு உரைத்தது.

கபிலர்.

    (பி-ம்) 2. ‘கண்முகைத்,; 3,’குறமகள’்.

    (ப-ரை.) தோழ-----, மால் வரை இழிதரும் -பெரிய மலையினிடத்து வீழும், அருவி-----, கல் முகை ததும்பும் - பாறைகளின் வெடிப்புக்களில் ஒலிக்கும், பல் மலர் சாரல் - பலமலரையுடைய சாரலில் உள்ள, சிறு குடி குறவன் - சிற்றூரிலுள்ள குறவனுடைய, பெரு தோள் குறுமகள் - பெரிய தோளையுடைய சிறிய மகளினது, நீர் ஓரன்ன சாயல் - நீரைப் போன்ற மென்மை, தீ ஓரன்ன என் உரன் அவித்தன்று - தீயை ஒத்த என் வலியைக் கெடச் செய்தது.

    (முடிபு) குறுமகளது சாயல் என் உரனை அவித்தன்று.

    (கருத்து) நான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்.

    (வி-ரை.) தோழவென்னும் விளி முன்னத்தாற் பெறப்பட்டது. கல்முகை - மலைமுழைஞ்சுமாம். ததும்புதல் - ஒலித்தல். பன்மலர்ச் சாரலென்றான், இயற்கைப் புணர்ச்சி பெற்றவிடம் அதுவாதலால். பெருந்தோள்: மகளிருக்குத் தோள் பெருத்தல் அழகு; குறுந். 71, வி-ரை. ஓரன்ன - ஒரு தன்மையையுடைய (தொல். நூன். 2, இளம்.); ஒத்த