பக்கம் எண் :

   

செய்யுளும் உரையும்31


மறைந்து போதலாலே பகையரசர்கள் அற்ற நோக்கி வந்து உயரிய வத்தவ நாட்டினைக் கைப்பற்றலாயினர், என்று மறைவிருந்த அந்த யூகி அறிந்து கொண்ட பின்னர், யாம் இனிச் சென்று சிறையிருக்கின்ற எம்மன்னன் உதயணகுமரனை அச்சிறையிடத்தே காண்பேம் என்று கருதி அந்த அவந்தி நாட்டை நோக்கிச் சென்றனன் என்க. (66)

71. துன்ன ருநற் கானமோடு தொன்ம லையிற் சாரலும்
செந்நெல் கள்வி ளைவயற் செழும்பு னன திகளும்
மன்னு நாடுந் தான்கடந்து மாகொ டிநி றைந்திலங்கு
நன்ன கருஞ் சேனையி னன்க மைச்சன் சென்றனன்.

(இ-ள்.) ஊடுபோதற்கரிய காடுகளையும் முதிய மலைச்சாரல்களையும் சிவந்த நெற்கள் விளைதற்கிடனான வயல்களையும் மிக்க நீரையுடைய பேரியாறுகளையும் செல்வம் நிலைபெற்ற நாடுகளையுங் கடந்து போய் உதயணன் அமைச்சனாகிய யூகி பெரிய கொடிகள் நிறைந்து விளங்குகின்ற நல்ல நகரமாகிய உஞ்சையின்கண் புகுந்தான்; என்க. உஞ்சேனை - உஞ்சை (67)

உஞ்சை நகரத்தின்கண் யூகியின் செயன்முறைகள்
(கலி விருத்தம்)

72. ஒலிகட லன்ன வோசையுஞ் சேனைதன்
புலிமுக வாயிற் பொற்புடைத் திலங்கும்
மலிகுடிப் பாக்க மதின் மறைந்திருக்க
வலியதன் சேனை வைத்தன னன்றே.

(இ - ள்.) முழங்கா நின்ற கடல்போன்ற ஆரவாரத்தை யுடைய அந்த உஞ்சை நகரத்தின் புலிமுக மாடவாயிலின் அழகிய பக்கத்தே விளங்காநின்ற குடிமக்கள் நிறைந்த ஊர்மதிலில் வேற்றுருவில் மறைந்துறையும்படி வலிய தன்னுடைய படைமறவர்களை வைத்தனன;் என்க. (68)

யூகி மாறுவேடம் புனைந்து நகர்வீதியில் வருதல்

73. இன்னவை கேட்கி னின்னவை தருகென
மன்னவ னறியு மருளுரை பயிற்றி
மன்னிய வேடம் வகுத்துடன் கொண்டு
நன்னகர் வீதி நடுவினில் வந்தான்.

(இ - ள்.) இன்ன மொழிகளைக் கூறி வினவின் அவற்றிற்கு இன்னின்ன விடைதரல் வேண்டும் என்று தமக்குள் வரையறை செய்யப்பட்டுள்ள குறிப்பு மொழிகளைப் பண்டே உதயணன் நன்