[இச் சருக்கத்தின்கண் சுரமைநாட்டு நான்கு வகைப்பட்ட நிலவளங்களும், அவற்றுட்படும் பொருள்கள் தம்முள் மயங்கி நிற்குந் திறமும், நகரங்கள் ஊர்கள் முதலியவற்றின் சிறப்பும் பிறவும் கூறப் பெறுகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நானிலத்துக் கருப்பொருள்களும் மக்களுடைய தொழில் நலங்களும் இனிது விளக்கப்பெறுகின்றன.] |