பக்கம் எண் :

பக்கம் : 33
 

இரண்டாவது
நகரச் சருக்கம்

     [இச் சருக்கத்தின்கண், முன்னேகூறிய சுரமைநாட்டின் தலைநகரமான போதனமா
நகரத்தின் சிறப்பும்; அந் நகரத்தின்கண் பயாபதி என்னும் அரசன் இருந்துசெய்யும்
அரசியற் சிறப்பும்; அவன் ஆயிரவர்க்கு மேற்பட்ட மகளிரை மணந்து, அவருள்ளும்
மிகாபதி, சசி என்ற இருவரை அரசிய ராய்க்கொண்டு இன்புற்றிருந்த சிறப்பும் பிறவுங்
கூறப்பெறுகின்றன. முதற்பதினைந்து செய்யுட்கள் நகரச் சிறப்பையும், மற்றைப் பத்தொன்பது
செய்யுட்கள் அரசனது சிறப்பையுங் கூறுகின்றன.]
 

சுரமை நாட்டுப் போதனமா நகரம்
36. சொன்னநீர் வளமைத் தாய சுரமைநாட் டகணி சார்ந்து
மன்னன்வீற் றிருந்துவைக நூலவர் வகுக்கப் பட்ட
1பொன்னவிர் புரிசை வேலிப் போதன மென்ப துண்டோர்
நன்னகர் நாக லோக நகுவதொத் தினிய தொன்றே.
 
     (இ - ள்.) சொன்ன - முன்பு நாட்டுச் சருக்கத்திற் கூறிய; நீர் வளமைத்து ஆய -
நீர்மையும் வளப்பமும் உடைய; சுரமை நாட்டு அகணி சார்ந்து - சுரமை நாட்டின்
நடுவிடத்திலே அமைந்து; மன்னன் வீற்றிருந்துவைக - அந்நாட்டு அரசன் அரசு
வீற்றிருந்து வாழ்தற்கு இடமாக; நூலவர் வகுக்கப்பட்ட - சிற்பநூல் வல்லவர்களால்
அமைக்கப்பட்டதும்; பொன் அவிர் புரிசை வேலி - அழகு விளங்குகின்ற மதிலினாற்
சூழப்பட்டதும்; போதனம் என்பது-போதனம் என்று பெயர் கூறப்பெறுவதும்; நாகலோகம்
நகுவது ஒத்து இனியது ஒன்று-தேவருலகத்தை இகழ்ந்து நகைப்பதுபோன்று பலவகைச்
சிறப்புக்களையு முடையதுமான; ஓர்நல் நகர் உண்டு-ஒருசிறந்த நகரம் நிலவுலகத்தில்
உள்ளது. (எ - று.)
சுரமை நாட்டின் நடுவில் போதனமா நகரம் சிற்பநூன் முறைப்படி அமைந்து
தேவலோகத்தினும் சிறந்து விளங்குகின்றது என்க. அகணி-உள்ளிடம். “நூலறிபுலவர்
நுண்ணிதிற் கயிறிட்டுத் தேங்கொண்டு தெய்வ

     (பாடம்.) 1. பொனைவில்.