பக்கம் : 967 | | இதுவுமது | வேறு | 1553. | தேவர்க டிசைமுகங் காப்ப மாநிதி யோவல விரண்டுநின் றொருங்கு வீழ்தர மேவிய வருங்கலம் விளங்க நோக்கிய காவலன் செல்வநீர்க் கடலுண் மூழ்கினான். | (இ - ள்.) தேவர்கள் திசைமுகம் காப்ப - தெய்வங்கள் எட்டுத் திசையிடத்தும் நின்று காவல்புரியா நிற்ப, மாநிதி இரண்டும் நின்று - சங்கநிதி பதுமநிதி என்னும் சிறந்த நிதிகள் இரண்டும் தன் கருவூலத்தே நிலைத்து நின்று, ஓவல ஒருங்கு வீழ் தர - ஒழிவில்லாமல் ஒன்றுபட்டு விரும்பியவற்றை உதவா நிற்ப, மேவிய அருங்கலம் - சங்கு சக்கரம் முதலிய பொருந்தா நின்ற அருங்கலங்கள் ஏழும் தற்சூழ்ந்து, விளங்க - திகழாநிற்ப, நோக்கிய - இவையிற்றைக் கண்ட, காவலன் - திவிட்டநம்பி, செல்வ நீர்க் கடலுள் - செல்வமாகிய நீரையுடைய பேரின்பக் கடலினில் , மூழ்கினான் - முழுகித் திளைத்தான், (எ - று.) வீழ் - பெயர் - விரும்புவன என்பது பொருளாகக் கொள்க. தேவர்கள் திசை காப்ப மாநிதி இரண்டும் ஒழியாதே வேண்டவன நிதி தர, அருங்கலம் விளங்க இவையிற்றைக் கண்ட நம்பி செல்வமாகிய நீரையுடைய இன்பக் கடலுள் மூழ்கினான் என்க. | (423) | | அருகக் கடவுள் திருக்கோயில் விழாவயர்ந்து நகரம் மகிழ்தல் | 1554. | திருவமர் தாமரைச் செம்பொ னாயிதழ் மருவிய திருவடி வாமன் பொன்னகர் விரவிய விழவொடு வேள்விக் கொத்தரோ கருவிய வளநகர் கண்கு ளிர்ந்ததே. | (இ - ள்.) திருவமர் - திருமகள் விரும்புதற்குரிய, செம்பொன் ஆய்இதழ் - செவ்விய பொன்னிறமமைந்த நுணுகிய இதழ்களையுடைய, தாமரை மருவிய - தாமரை மலரிடத்தே பொருந்திய, திருவடி வாமன் - திருவடிகளையுடைய அருகபரமனுடைய, பொன்னகர் - அழகிய திருக்கோயில்களிடத்தே, விரவிய விழவொடு வேள்விக்கு ஒத்து - பொருந்திய விழாவுடனே விருந்தோம்பல் முதலிய உதவித் தொழிலிலே | |
| | | |
|
|