பக்கம் எண் :

பக்கம் : 971
 
1558. தேங்கமழ் தெய்வச் செம்பொற்
     றாமரை சுரிவெண் 1சங்க
மீங்கிவை நெதிக ளாக
     2வேழர தனங்க ளெய்தி
யாங்கமர் செல்வந் 3தம்மா
     லற்றைக்கன் றமர்ந்த மாதோ
வோங்கின னுருவத் தாலும்
     வில்லெண்ப துயர்ந்த தோளான்.
 
     (இ - ள்.) உருவத்தாலும் - திருமேனியினாலும், எண்பது வில் உயர்ந்த தேளான் -
எண்பது வில்லின் அளவு உயர்ந்த தோளையுடைய திவிட்டன், தேம் கமழ் தெய்வச்
செம்பொற்றாமரை - தேன்மணங்கமழும் கடவுட்டன்மை யுடைய பதும நிதியும்,
சுரிவெண்சங்கம் - சுரிந்த முகத்தையுடைய சங்கநிதி யும், ஈங்கிவை - என்று கூறப்படுகின்ற
இரண்டும், நெதிகளாக - தன் கருவூல முதற்பொருளாய் அமைய, ஏழரதனங்கள் எய்தி
-இருகூற்று ஏழுமணிகளையும் பெற்று, அற்றைக்கன்று - நாள்தோறும், ஆங்கு அமர்
செல்வம் தம்மால் - ஆண்டு உள்ளனவாகிய செல்வமாகிய, இருவகை நிதிகளாலும்,
அமர்ந்த - தாம் விரும்பிய விரும்பியபடியே எய்தி, ஓங்கினன் - சிறந்தான், (எ - று.)

     இருவகைய எவ் வேழுமணிகளாவன, உயிர் மணியேழும் உயிரில்மணி ஏழுமாம்,
அவையாவன:- கிரகபதி, சேனாபதி, விஸ்வகர்மா, புரோகிதன், அசுவம், கஜம், ஸ்திரீ.
இவ்வேழும் சீவரத்னமென்ப; சக்கரம், குடை, வாள், தண்டம், சூடாமணி, சர்மம், காகிணி -
இவ் வேழும், அசீவ ரத்ன மென்ப.

     புகழானே யன்றி உருவத்தாலும் எண்பது வில்லுயர்ந்த நம்பி என்க. வில், ஓர் அளவு
கருவி. “ஐவிலின் கிடக்கை“ என்றார் மணிமேகலையினும். எய்தி என்னும் சொல் பின்னும்
கூட்டப்பட்டது.

 (428)

 
1559. தெய்வங்கள் செப்பி னீரெண் ணாயிரம் திசைநின் றோம்ப
மையறு மன்ன ரீரெண் ணாயிரர் வணங்க வான்மேல்
நொய்தியல் விஞ்சை வேந்தர் நூற்றொரு பதின்மர் 4தாழக்
கையமை திகிரி யானைக் காமனே கலவிக் கின்றான்.
 
     (இ - ள்.) தெய்வங்கள் - தேவர்கள், செப்பின் - கூறுங்கால், ஈர் எண்ணாயிரம் -
பதினாறாயிரவர், திசைநின்று ஓம்ப - எட்டுத் திசைகளினும் நிலைத்து நின்று
புறங்காப்பவும், மையறும் மன்னர் - குற்றந்தீர்ந்த அரசர்கள், ஈர் எண்ணாயிரர் வணங்க -
பதினாறாயிரவர், தன் அடிகளிலே வணங்கா நிற்பவும், வான்மேல் - விசும்பிடத்தே,
நொய்து இயல் - எளிதாய் இயங்
 

     (பாடம்) 1 சங்கு. 2வேழிர. 3 தன்னால் வில்லென்வ. 4தாழாக்.