|
பல
பண்டங்களைக் கலத்திலேற்றிக் கடனீந்திக் கரைவந்து துறை
சேர்ந்தவர்கள் கலங் கவிழுமென்று விரைந்து பாரத்தை இறக்குவது போலச்
சந்திரமதி ஆடையும் அணியும் இடைக்குப் பாரம் என எண்ணி அவற்றைக்
களைந்தான் அரிச்சந்திரன் என்பது உவமை அணி.
(255)
| |
சந்திரவதி
தன் உறுப்புகளாகிய படையால் அரிச்சந்திரனுடன்
காதற்போர் புரிதல் |
| 360. |
தானைசென்
றார்க்க மங்கல மிடற்றுச்
சலஞ்சலம் புலம்பிடத் தனக்கோட்
டானைசென் றடர மாத்தலை மயங்க
அல்குலந் தேரினைச் செலுத்தி
மீனைவென் றடுகண் வேல்படப் புருவ
வில்வளைத் தயோத்தியர் வேந்தைத்
தேனைவென் றினித்த செஞ்சொலா ளின்பச்
செருத்தொழில் பற்பல விளைத்தாள். |
(இ - ள்.)
தானை சென்று ஆர்க்க - மேகலையாகிய சேனை
அங்கு மிங்கும்சென்று ஆரவாரிக்கவும், மங்கல மிடற்றுச் சலஞ்சலம் -
திருமங்கிலியம் விளங்குகின்ற கழுத்தாகிய சங்கு முழங்கவும், தனக்
கோட்டு ஆனை சென்று அடர - கொங்கைகளாகிய கொம்புகளை யுடைய
யானைகள் போய்ப் பாயவும், மாத்தலை மயங்க - வண்டுகளாகிய
குதிரைகள் இடம் மயங்கித் திரியவும், அலகுல் அம் தேரினைச் செலுத்தி
- அல்குலாகிய அழகிய தேரைச் செலுத்தி, மீனை வென்று அடு கண்
வேல் பட - மீன்களை வென்று போர் செய்யும் கண்களாகிய வேல்
பாயவும், புருவ வில் வளைத்து - புருவமாகிய வில்லை வளைத்து,
அயோத்தியர் வேந்தை - அயோத்தி அரசனாகிய அரிச்சந்திரனோடு,
தேனை வென்று இனித்த செஞ்சொலாள் - தேனினும் இனிய செவ்விய
மொழியுடைய சந்திரமதி, இன்பச் செருத்தொழில் பற்பல விளைத்தாள்-
காதல் இன்பமாகிய போர்த்தொழிலைப் பலபல முறையிற் புரிந்தாள்.
வேந்தை : இரண்டனுருபு மூன்றவதன் பொருளில் வந்த
உருபு
மயக்கம், தானையைச் சேனையாகவும், மிடற்றைச் சங்காகவும்,
கொங்கைகளைக் கோட்டு யானைகளாகவும், வண்டுகளைக்
குதிரைகளாகவும், அல்குலைத் தேராகவும், கண்ணை வாளாகவும்,
புருவத்தை வில்லாகவும், கலவியைப் போராகவும்
உருவகப்படுத்தினமையின் முற்றுருவன வணி.
(256)
| |
அரிச்சந்திரனும்
சந்திரமதியும் கன்னோசி கடந்து
அயோத்தி அடைதல் |
| 361. |
இந்நெறி
தளரா திறைவனும் மயிலும்
இன்பம்உண் டிடைவிடா திணங்கிக்
கன்னமா புரியில் சிலபகல் கழீஇப்பின்
கடிநகர் எய்துவான் கருதி |
|