|
கதிர்
: ஆகுபெயர். வஞ்சமற்ற நன்னெறி மாசற்ற வெண்மைக்கு
உவமையாயிற்று. அரணமும் அகழும் எண்ணும்மை.
அரிச்சந்திரனும் சந்திரமதியும் கொடி குடை முதலிய விருதுகளுடன்
புறப்பட்டுக் கோட்டையும் அகழுங் கடந்து புறஞ்சென்றனர் என்பது.
(258)
| |
யாவரும்
வழியனுப்பிச் செல்ல அரிச்சந்திரன்
கன்னோசி கடந்து செல்லல் |
| 363. |
காந்தளம்
செங்கைக் கன்னியர் சில்லோர்
கைதொழு திடைஇடை மீள
மாந்தர்கள் வணங்கி அவரவ ருடனே
மந்திரத் தலைவர்மீண் டேக
வேந்தர்வீழ்ந் திறைஞ்சிப் பணிவிடை கேட்டு
விடைகொடு மீண்டுமூ ரெய்தப்
போந்தனன் களிறும் புரவியும் தேரும்
புடைதொறும் கடல்எனப் பொலிய. |
(இ - ள்.)
காந்தள் அம் செங்கைக் கன்னியர் சில்லோர் - காந்தள்
பூப்போன்ற அழகிய சிவந்த கைகளையுடைய பெண்கள் சிலர், கை
தொழுது இடை இடை மீள - கைகளால் வணங்கி மத்தியில் மத்தியில்
திரும்பிச் செல்ல, மாந்தர்கள் வணங்கி அவரவர் உடனே வர - ஏனைய
மனிதர் - கும்பிட்டுக்கொண்டு கூடவே வர, மந்திரத் தலைவர் மீண்டு ஏக
- மந்திரிகள் திரும்பிப் போகவும், வேந்தர் வீழ்ந்து இறைஞ்சிப் பணிவிடை
கேட்டு விடை கொடு மீண்டும் ஊர் எய்த - அரசர்கள் விழுந்து வணங்கி
அரிச்சந்திரன் ஆணையை மேற்கொண்டு விடை கொடுத்துத் திரும்பவும்
கன்னோசி யடைய, களிறும் புரவியும் தேரும் புடை தொறும் கடல் எனப்
பொலியப் போந்தனன் - யானையும் குதிரையும் தேரும்
பக்கங்களிலெல்லாம் கடல் போன்று ஆரவாரித்து விளங்க அரிச்சந்திரன்
கன்னோசி நகரம் விட்டு நீங்கினான்.
காந்தள் கை : உவமத்தொகை; செங்கை : பண்புத்தொகை;
கை
தொழுது : மூன்றாம்வேற்றுமைத்தொகை; கன்னமாபுரிக் கன்னியர் பலர்
உடன் வந்து கைதொழுது வழியனுப்பவும் அந்நகர மாந்தர் பலரும் வந்து
வணங்கி வழியனுப்பவும் விடைகொண்டு சேனைகளுடன் சென்றான்
அரசன் என்பது.
(259)
நிழலை வேறாரு
பெண்ணன்னம் என நினைத்துப் பெண்ணன்னம்
ஊடும் மருதநிலம் அடைதல்
கலிநிலைத்துறை
| 364. |
தோடு
துன்றிய மரைமிசைத் துணைபுணர் அன்னம்
மாடு நின்றதோர் மதிநிழ றனைக்கண்டு மற்றோர்
பேடு நின்றெனாச் சேவலைப் பிரிந்தயன் மலர்சேர்ந்
தூடு கின்றஅச் செழும்புனற் றண்பணை உற்றார். |
|