|
உடல்
புளகம் |
391. |
உறுதல்
செயிர்அ றப்புனல் தேக்கிடக் காமத்தண்
பயிர்மு ளைத்தெழும் பான்மைஇ தாம்என
உயிர்ந லக்கொடி ஒண்ணுதல் வண்ணமெய்ம்
மயிர்பொ டிப்புற் றரும்பிம லர்ந்தவே.
|
(இ
- ள்.) செயிர் அறப் புனல் தேக்கிட - குற்றம் நீங்க நீரை
நிரப்புதலினால், காமத் தண் பயிர் முளைத்து எழும் பான்மை இதாம் என
- காமமாகிய குளிர்ந்த பயிர் முளைத்து எழுகின்ற தன்மை இதுவாம் என்று
கூறும்படி, உயிர் நலக் கொடி ஒண்ணுதல் - அரிச்சந்திரனுக்கு
உயிர்போன்ற நலத்தையுடைய பூங்கொடிபோன்ற ஒளிபொருந்திய
நெற்றியையுடைய சந்திரமதியின், வண்ண மெய் - அழகிய உடம்பில், மயிர்
பொடிப்புற்று - உரோமஞ் சிலிர்த்து, அரும்பி மலர்ந்த - புளகம் தோன்றி
மலர்ந்தது.
சந்திரமதி
சூற்கொண்டதால் காமப்பயிர் வளர்ந்து நிற்குமாறு
மெய்ம்மயிர் புளகரும்பி நின்றது என்க.
(287)
|
சூற்குறிகள்
தோன்றுதல் |
392. |
நிலைம
யிர்க்கண் குருக்கொண்டு நீள்கரும்
கொலைம தர்க்கண் குழிந்து குளிர்முகம்
கலைநி லாவின்வி ளர்த்துக்க திர்மணி
முலைமு கங்கள்க றுப்புமு திர்ந்தவே. |
(இ - ள்.)
நிலை மயிர்க்கண் குருக்கொண்டு - உடம்பில்
நிலைபெற்றுள்ள மயிர்க்கால்களெல்லாம் சிலிர்க்கப்பெற்று, நீள் கரும்
கொலை மதர்க்கண் குழிந்து - நீண்ட கருமையாகிய நோக்கால் துன்
புறுத்துகின்ற மதர்த்த கண்கள் குழிந்து பள்ளமாய், குளிர் முகம் -
குளிர்ந்த முகமானது, கலை நிலாவின் விளர்த்து - கலைகளையுடைய
சந்திரனைப்போல் வெண்மையாகி, கதிர் மணி முலை முகங்கள் - ஒளி
பொருந்திய நீலமணிபோன்ற முலைக்காம்புகள், கறுப்புமுதிர்ந்த - கறுப்பு
மிகுவதாயின.
ஏகாரம் :
ஈற்றசை; மெய்ம்மயிர் சிலிர்த்தலும் கருவிழி யுட்குழிதலும்,
முகம் வெளுத்தலும், கொங்கைக்கண் கறுத்தலும் கருப்பக் குறிகள் ஆம்.
(288)
|
சூன்
முதிர்தல் |
393. |
தொடைம
லர்க்குழல் சோர்ந்து செழுந்துகில்
உடைநெ கிழ்ந்துபை யப்பைய ஒல்கியே
நடைபெ யர்ந்து நரம்புப சத்தவா
இடைஉண் டென்றறி யப்பட்டதி யார்க்குமே. |
(இ
- ள்.) தொடை மலர்க்குழல் சோர்ந்து - தொடுக்கப்பட்ட
பூக்களை அணிந்த கூந்தல் அவிழ்வதாகி, செழுந் துகில் உடை
நெகிழ்ந்து -
|