செழுமையாகிய பட்டாடை
குலைந்து, பையப்பைய ஒல்கி - மெள்ள
மெள்ளத் துவண்டு, நடைபெயர்ந்து - நடை நடந்து, நரம்பு பசத்தவா -
நரம்புகள் பச்சைநிறம் உடையனவாய், இடை உண்டு என்று -
சந்திரமதிக்கு இடை ஒன்று இருக்கிறதென்று, யார்க்கும் அறியப்பட்டது
- கருத்தரித்த அக் காலத்தில்தான் எல்லோர்க்கும் தெரியவந்தது.
பையப்
பைய : அடுக்குத்தொடர்; இடைவிடாமைமேற்று,
ஏகாரம் :
அசை. பட்ட தியார்க்கும் : குற்றியலிகரம்.
கூந்தல்
சோர்ந்தது, உடை நெகிழ்ந்தது, நடைதளர்ந்தது, நரம்பு
பசந்தது, இடை பருத்து எல்லார்க்கும் தோன்றிற்று. இவை சூல் வரவர
வளர்ந்து முதிர்ந்தது என்பதைக் காட்டும் அறிகுறிகள் ஆம்.
(289)
|
ஆண்மகப்
பேறு |
394. |
பாங்கி
மார்இரு பக்கமும் நின்றுகை
தாங்கி முன்செலத் தான்நடந் தொல்கியே
வாங்கு திங்கள் நிறைந்தபின் பாயிழை
தீங்கி லாமல் சிறுவனைப் பெற்றனள். |
(இ - ள்.)
பாங்கிமார் - தோழிமார்கள், இருபக்கமும் நின்று
கைதாங்கி முன் செல - இரண்டு பக்கங்களிலும் நின்று கையைப்
பிடித்துக்கொண்டு முன்னே போக, தான் நடந்து ஒல்கி - தானும் பின்னே
நடந்துபோய்த் தளர்ந்திருந்து, ஆங்கு திங்கள் நிறைந்த பின்பு - அவ்வாறு
பத்துத் திங்கள் நிறைந்த பிறகு, ஆயிழை தீங்கு இலாமல் சிறுவனைப்
பெற்றனள் - ஆராய்ந்தெடுக்கப்பட்ட ஆபரணங்களை யணிந்த சந்திரமதி
யாதொரு கேடும் இன்றி ஆண்மகனைப் பெற்றெடுத்தாள்.
ஆயிழை : அன்மொழித்தொகை. பெறு : பகுதி; அன் : சாரியை;
அள் : பெண்பால் வினைமுற்று விகுதி; பகுதி ஒற்று இரட்டித்து
இறந்தகாலங் காட்டியது. ஒல்கியே
ஏகாரம் :
அசை. சூல் முதிர முதிரத் தானே நடக்க முடியாது
பாங்கியர் கைதாங்கிச் செல்ல நடந்து களைத்து இளைத்து இருந்தனள்
எனக் கொள்க.
(290)
|
அரிச்சந்திரன்
மகிழ்ச்சி |
395. |
பிள்ளை
வந்து பிறந்தனன் என்றலும்
வள்ளல் உள்ளம் மகிழ்ந்திர வோர்க்கெலாம்
அள்ளி நீர்அறை யைத்திறந் தேழுநாள்
கொள்ளை கொண்மின் எனக்கொடுத் தானரோ.
|
(இ
- ள்.) பிள்ளை வந்து பிறந்தனன் என்றலும் - ஆண்மகவு
வந்து பிறந்தான் என்று தோழியர் சொன்னவுடனே, வள்ளல் - இடையெழு
வள்ளல்களில் ஒருவனாகிய அரிச்சந்திரன், உள்ளம் மகிழ்ந்து - மனம்
மகிழ்ந்து, இரவோர்க் கெலாம் - ஏற்போர் யாவர்க்கும், நீர் அறையைத்
|