அரம்பையரின்
நெற்றி பாதி மதியும் பட்டம் நிலவொளியும் குழை
விண்மீனும் தோளிலுள்ள மணி மாலை மின்னலும் கொண்டை மேகமும்
போன்றன. ஆதலின் தேவலோகப் பெண்களை வான ஒளிப்
பொருள்களும் மேகமும் என உலகத்தவர் கூறுவர். பாதி மதி:
குறிப்புப்பெயரெச்சத்தொடர், மாதரே: ஏகாரம் தேற்றம். வீதி வாய்:
ஏழாம்வேற்றுமை.
(16)
|
பொன்னுலகச்
சிறப்பு |
428. |
நன்ன
கர்ப்பெரு வண்மை யும்திரு
வும்சிறப்பு நலின் றிடில்
பொன்ன கர்க்குவ மிப்பர் பற்பல
நூனெறிப் புல வோரெலாம்
அந்ந கர்க்குவ மிக்க ஒப்பதி
லண்ட ரண்டம னைத்திலும்
எந்ந கர்ப்பொலி வந்ந காக்கு
நிகர்க்கும் என்ன இயம்புவேன். |
(இ - ள்.)
நல் நகர்ப் பெரு வன்மையும் திருவும் சிறப்பும்
நவின்றிடில் - நல்ல ஒரு நகரத்தினுடைய பேரழகினையும் பெருஞ்
செல்வத்தினையும் பெருஞ்சிறப்பினையும் கூறின், பற்பல நூல் நெறிப்
புலவோர் எலாம் - பலபல நூனெறிப் புலவர்கள் எல்லாம், பொன்
நகர்க்கு உவமிப்பர் - பொன்னகரத்திற்கு ஒப்பாகச் சொல்வார்கள்,
அந்நகர்க்கு உவமிக்க அண்டர் அண்டம் அனைத்திலும் ஒப்பது இல் -
அத்தகைய பொன் நகர்க்கு ஒப்பாகச் சொல்வதற்கு அண்டபகிரண்டம்
முழுவதினும் அதுபோன்றது இல்லை எந்நகர்ப் பொலிவு அந்நகர்க்கு
நிகர்க்கும் என்ன இயம்புவேன் - எந்த நகரத்தின்அழகு அந்த
நகரத்திற்கு ஒப்பாகும் என்று நான் சொல்லுவேன்.
உம்மை: எண்ணும்மை; இயம்ப இயலாது என்பதாம்.
ஒரு நகரத்தைச்
சிறப்பித்துக் கூறும்போது பொன்னகரத்தை உவமையாக்குவார் புலவர்கள்.
அப் பொன்னகரத்தையே சிறப்பிக்க எந்நகரத்தை உவமையாக்க வியலும்?
ஒரு நகரமும் அதற்கு உவமையாகாது என்க.
(17)
|
கவிக்
கூற்று |
429. |
ஆன
சித்திர மாந கர்க்குள்
அலாந் துயர்ந்தெழு கற்பகக்
கான கத்திடை வேலை பக்தொர்
காசு நீள்வரை யாமெனத்
தான வர்க்குட னான வெற்பரி
தாழ்சு டர்க்குலி சக்கர
வான வர்க்கிறை யோனமாந் துறை
மண்டபத் தைவி ளம்புவாம். |
|