433. |
காத
மாயிர நான்ம ருங்கு
கணித் தகன்று நிலந்தொறும்
பூத மாயிர கோடி கோடி
புறத்தி னின்று சுமந்திட
மீத டர்ந்து நிவந்து மேனிலம்
விண்டெ ழுந்து வளர்ந்துபோய்
ஆதி நான்முக னார்ப தத்தினும்
அப்பு றத்தும் உயர்ந்ததே. |
(இ
- ள்.) (அரசிருக்கை மண்டபம்) ஆயிரகாதம் நான்
மருங்குகணித்து அகன்று - ஆயிரம் காதவரை நான்கு பக்கங்களிலும்
கணிக்கப்பட்ட அகலமுடைத்தாய், ஆயிரகோடி கோடி பூதம் புறத்தினின்று
சுமந்திட - ஆயிரங் கோடானுகோடி பூதங்கள் வெளியே நின்றுதாங்க,
மீது அடர்ந்து நிவந்து - மேலே நெருங்கி உயர்ந்து. மேல் நிலம் விண்டு
எழுந்து வளர்ந்துபோய் - மேலுலகு பிளந்து உயர்ந்தது எழுந்துபோய்,
ஆதி நான் முகனார் பதத்தினும் அப்புறத்து உயர்ந்தது - ஆதியாயுள்ள
பிரமனுலகத்திற்கும் அப்பால் உயர்ந்திருந்தது.
உயர்ந்தது
+ ஏ = அசை.
அரசிருக்கை
மண்டபம் நாற்புறமும் ஆயிரங்காதவரை யகன்று
பூதங்கள் கோடிக்கணக்கானவை தாங்குவதுபோல உருவம் செய்து
நிறுத்தப்பட்டு மேலுயர்ந்து பிரமனுலகத்தையும் கடந்து நின்றது என்பது.
(22)
|
இந்திரன்
கொலுவீற்றிருத்தல் |
434. |
அயன
றிந்துவி தித்த வண்ட
மனைத்துமிந் நிக ரன்றென
மயன றிந்து படைத்த சித்திர
மண்ட பத்தினி லங்கவன்
வியன றிந்து கொடுத்த வாதன
மீதுமா தொடும் வேதநூல்
பயன றிந்துணர் குரவர் தம்மொடு
பாகசா தனன் மேவினான். |
(இ - ள்.)
அயன் அறிந்து விதித்த அண்டம் அனைத்தும் இந்நிகர்
அன்று என - பிரான் தெரிந்து படைத்த எல்லா உலகங்களும் இதற்கு
ஒப்பல்ல என்று சொல்லும்படி, மயன் அறிந்து படைத்த சித்திர
மண்டபத்தினில் - தேவசச்சனாகிய மயனானவன் தெரிந்து படைத்த
அழகிய இம்மண்டபத்தில், அங்கு அவன் வியன் அறிந்து கொடுத்த
ஆதனம் மீது - அங்கு மயனானவன் இந்திரனுடைய பெருமை தெரிந்து
கொடுத்த
|